அவரது எழுத்துக்கள் காட்சிகளாக கண் முன்னே விரியும்.
புத்தனாவது சுலபம் என்ற சிறுகதை தொகுப்பில் முதல் கதை இரண்டு குமிழ்கள் ஏற்கனவே விகடனில் வாசித்தது. பெண் என்ற ஒற்றை புள்ளியில் இணையும் போலீஸ் மற்றும் கைதி பற்றிய கதை.
நிறைய கதைகள் பெண்களின் வலி மிகுந்த வாழ்வை சொல்கின்றன.
ஜெயந்திக்கு ஞாயிற்றுக்கிழமை பிடிப்பதில்லை. சாதாரண கதை போல் தோன்றலாம். எனக்கு அப்படி தோன்றவில்லை ஏன் என்றால் எனது அம்மாவும் மாமியாரும் ஜெயந்தியே.
கடல் பார்ப்பது சாதாரண விசயம். அதில் ரசனையை ஏற்றி கடல் மீது காதல் கொள்ள வைக்கிறார்.
கோகிலவாணியை யாருக்கும் நினைவிருக்காது கதை, கோகிலவாணியின் பின்னால் இருக்கும் கண்ணீர் பக்கங்களை சொல்கிறது.
நடுவில் இருப்பவள் கதை அழகாக சொல்லி முடிவில் வைக்கும் யதார்த்தமும் அருமை.
புத்தனாவது சுலபம், இன்றைய தலைமுறை இளைஞர்களின் பழக்கங்கள் பற்றிய கதை.
No comments:
Post a Comment