சிறுகதை
சிறுகதை வாசிப்பு
மழை பெய்து முடித்த
மாலையில் பருகும்
தேநீர் போன்றது
கடைசி துளியில்
இருக்கும் இனிப்பை
போல இருக்கும் முடிவு !!!
புதினம்
புதினங்கள் நெடுந்தூரம்
பயணங்கள் போல
அழகான காட்சிகளை
ரசிக்கலாம்
வெம்மையையும் குளிரையும்
உணரலாம்.
சில நேரங்களில் எரிச்சல்
வரலாம்.
ரசித்து அனுபவிக்கலாம் !!!
கவிதைகள்
கவிதைகள் வாசிப்பு
கண்ணாடி முன் நின்று
நம்மை நாமே
அழகாய் பார்ப்பது போன்ற
உணர்வு
எல்லாருக்கும் வாய்க்காது !!!
No comments:
Post a Comment