Tuesday, 19 January 2021

சித்தார் ஹைலைட்ஸ்

Day 1 - Session 1
சித்தாரில் வேலை கிடைத்தது அளவில்லா ஆனந்தம். அதே சமயம் சக நண்பர்களுக்கு கிடைக்கவில்லை என்ற வருத்தமும் இருந்தது. 

சித்தாரில் ஜாயின் பண்ண திருச்சி போக வேண்டி இருந்தது. பிரகதீஸ் ரயிலில் டிக்கெட் எடுத்து விட்டான். தங்குவதற்கு நல்ல ஹோட்டல் கேட்டதற்கு, தமிழ்நாடு ஹோட்டலை பரிந்துரைத்தான் ஜனா.

ஹோட்டலில் படுத்த பத்தாம் நிமிடத்தில் பிரகதீஸ் விழித்து விட்டான். மூட்டை பூச்சி துயில் கொள்ளும் அறை அது. கட்டிலில் படுக்காமல் நாற்காலியில் ஒருக்களித்து அந்த இரவை கழித்தோம்.

1-04-09 காலையில் ஆபிஸில் காலடி எடுத்து வைத்தோம். மதியம் குருவாயூர் ட்ரெயினை பிடிக்க முடியவில்லை. ஒரு தனியார் பேருந்தில் சென்னை திரும்பினோம். அடுத்த நாள் சென்னையில் பணியை துவக்க.

இயக்குனர் சங்கருக்கு பிடித்தமான டெம்பிள் டவர் இரண்டாவது மாடியில் அலுவலகம். நான், பிரகதீஸ், பிரகாஷ், உபயத்துல்லா, பிரகாஷ், முத்து குமார், ஜஸ்டின் மற்றும் பாஸ்கரன் ஆகியோர் ஆரம்பித்தோம்.

முதலில் இரு சிஸ்டம் மட்டுமே இருந்தது. அதில் ஒன்றை சுரேஷ் எடுத்து கொள்ள மற்றொன்றை முத்து எடுத்துகொண்டான். அங்கு தான் அதிர்ஷ்ட தேவதை என் கரம் பிடித்து கோனியம்போ ப்ராஜெக்டில் தள்ளினாள்.

Day 1 - Lunch
முதலில் நாங்கள் மதிய உணவுக்கு செல்வது ஜனதாவுக்கு தான். டிப்ஸ்காக சுழன்று சுழன்று வேலை செய்யும் பேரர்கள், நாங்கள் டிப்ஸ் தருவதில்லை என்று தெரிந்த பின் முத்து படத்தில் ரஜினிக்கு பரிமாறுவது போல் தான் பரிமாறுவார்கள். நந்தனத்தில் வேறு ஹோட்டல்கள் இல்லை. எங்களுக்கு வேறு வழியும் இல்லை.

Day 1 - Session 2
திருச்சி பாலிடெக்னிக்கில் இருந்து கேம்பஸில் தேர்வானவர்களில் ஆறு பேரை சென்னைக்கு அனுப்பினார்கள்.
வந்தவர்கள் வசந்தகுமார், முத்துகுமார், ராஜ்குமார், மணிகண்டன், தங்கராஜ் மற்றும் தாஸ். இவர்கள் வந்த பின் ஓரளவுக்கு கூட்டம் சேர்ந்தது போல் ஆனது அலுவலகம். ஆனாலும் பெரிசாய் சுவாரஸ்யம் எதுவுமில்லை.

Day - 1 - Tea
எங்களுக்கு டீ போட்டுத் தரும் பலாய் கொஞ்சம் கொஞ்சமாக எஙகளுடன் பழக ஆரம்பித்தான்.
பலாயின் காஃபியை விட டீ சுவை நிறைந்தது.

Day - 1 - Session 3
எங்களோடு இன்டர்வியூ அட்டென்ட் பண்ணி பத்து மாதங்களுக்குப் பிறகு வேலை கிடைத்து ரிஸ்வான் சென்னையிலே  எனது டீம்லையே சேர்ந்துகொண்டது ஆனந்தமாய் இருந்தது. ரிஸ்வான் வந்தபின் மொக்கை ஜோக்குகள், சூர மொக்கை காமெடிகள் என கலகலப்பானது சித்தார்.

Day -1 Stumps.
எல்லாரும் வேலை நிமித்தமாய் பல புதிய விஷயங்கள் கற்கத் தொடங்கியிருந்த காலம் அது.

Day -2 Session -1
பிரவீன்குமார், சரவணக்குமார் என மேலும் பல குமார்கள் இணைந்து கொண்ட காலம் அது.

Day -2 - Lunch
மணிகண்டனின் பெருமுயற்சியால் எங்களுக்கு சாப்பாடு செய்து தர ஒரு ஆளை பிடித்தான். அவர்களே கொண்டு வந்து அலுவலகத்தில் தரும்படியும் செய்தான், சுவையான சாப்பாடு கிடைத்தது. வாரம் ஒருமுறை மணிகண்டனே கலெக்சன் போட்டு அவர்களிடம் கொடுத்து கொண்டிருந்தான். குறிப்பாக மீன் குழம்பு மிகவும் நன்றாக இருந்தது.

Day -2 - Session 2
அலுவலக அலுப்பு மற்றும் மாதவனின் டார்ச்சர் தாங்க முடியாமல் முத்துக்குமார் ராஜினாமா செய்தான். டெல்லியில் வேறு வேலை கிடைத்து சென்றுவிட்டான்.

First Wicket
Muthu Kumar Ravanan b. Madhavan

Day -2 - Tea
மாலைத் தேநீரின் போது எப்பொழுதாவது இளங்கோவன் சார் அவர் சொந்த செலவில் சமோசா வாங்கி தருவார். பசித்திருக்கும் அந்த தருணத்தில் அது மிகவும் சுவையாக இருக்கும்.

Day -2 - Session 3
திருச்சி ஆபிஸில் வேலை பார்க்கும் மகேஸ் சார், பழனிராஜா சார், நந்தகுமார் சார் மற்றும் சங்கர் சார் நெருங்கி பழக ஆரம்பித்தார்கள். குறிப்பாக மகேஸ் சார் பேனாவைக் கையில் வைத்து சுழற்றுவது ரொம்ப ஸ்டைலாக இருக்கும்.

Day -2 - Stumps
நிறைய பேர் மேன்ஷனில் தஞ்சம் ஆனார்கள். நாங்கள் டீமாக சேர்ந்து கிரிக்கெட் விளையாட தொடங்கியிருந்தோம். அப்படி ஒருநாள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது பாஸ்கரின் அப்பா இறந்து விட்டதாக தகவல் வந்தது. முதல் முறையாக ஒரு துக்க நிகழ்வுக்கு நீண்டதூரப் பயணம் போனோம் வேளாங்கண்ணி எடுத்த வெள்ளபள்ளத்துக்கு.

Day - 3 Session 1
எனது கல்லூரி ஜூனியரான ஆண்டர்சன் சேர்ந்த பிறகு சித்தார் கலகலக்க துவங்கியது, சரவணக்குமார் ப்ளான் போட ஒவ்வொரு ட்ரிப்பாக போக ஆரம்பித்தோம்.
முதல் ட்ரிப் பாஸ்கரின் திருமணம். 
அதுவரை அட்வென்சரஸ் ட்ரிப். சென்னையில் இருந்து கிளம்பியதும் பஸ்ஸின் டிரான்ஸ்மிஷன் ஷாப்ட் உடைந்தது.
போட்டில் கடலுக்குள் சென்று டீசல் இல்லாமல் தத்தளித்தோம்.
வரும் வழியில் சிதம்பரம் கோவிலுக்கு சென்று சென்னைக்கு திரும்பினோம்.

Day 3 Lunch
எல்லாரும் சேர்ந்தபின்
 அரசப்பரில் ஃபுல் மீல்ஸ் வாங்கி சாப்பிடும் பழக்கம் ஏற்பட்டது. அரசப்பரில் மீன் குழம்புதான் சிறப்பு. இரண்டு பேர் சேர்ந்து ஒரு மீல்ஸ் வாங்கி சாப்பிடுவது வழக்கம்.அள்ள அள்ளக் குறையாமல் சோறு வந்து கொண்டே இருப்பது தான் அரசப்பரின் சிறப்பு.

Day 3 Session 2
திருச்சி பைப்பிங் டீமில் போதுமானவர்கள் இல்லாததால் 2 பேரை திருச்சிக்கு கூப்பிட்டார்கள். இன்ஜினியர்களில் சுரேஷும் டிசைனர்களில் மணிகண்டனும் திருச்சிக்கு டிரான்ஸ்பர் ஆனார்கள்.

S Suresh retired hurt
Mani kandan retired hurt

Day 3 Tea
சாயங்காலம் டீ குடிக்க, பக்கத்து டீ கடைக்கு சென்றால் எத்தனை பேருக்கு டீ கொடுத்தாலும் எங்களுக்கு மட்டும் கடைசியாக தான் தருவான். வின்சென்ட் என்கிற அந்த பையன். அவன் எங்கள் மனதை புரிந்து கொண்டவன். 6 மணி முதல் 6.30 மணி வரை அந்த டீக்கடை முன்பு தான் நிற்போம். நாங்கள் ஸ்பெஷல் டீ குடிப்பது இல்லை, ஆனால் அங்கு நின்று குடித்த எல்லா டீயுமே ஸ்பெஷல் டீ தான்.


Day 3 Stumps
நாலாவது நாள் ஆரம்பிப்பதற்கு முன்னரே சரசரவென விக்கெட்டுகள் விழுவது போல அடுத்தடுத்து ராஜினாமா விழுந்தது.

Day 4 - Session 1
முதலில் ஜஸ்டின் பேப்பர் போட்டான். பிறகு பிரகதீஷ், அடுத்து பாஸ்கரன் அதற்கு பிறகு நானும் பேப்பர் போட்டேன்.
பேப்பர் போட்டு நோட்டீஸ் பீரியடில் வேலை பார்ப்பது ரொம்ப ஜாலியான விஷயம் எனக்கு இரண்டு மாதங்கள் கிடைத்தது.

Day 4 - Session 2
விண்ணைத்தாண்டி வருவாயா படம் பார்த்துவிட்டு ஆலப்புழா போக முடிவு செய்தோம். சரவணகுமார் ஏற்பாடுகளை பார்த்தான், ட்ரெயின் டிக்கெட் புக் செய்தோம்.
ஒரு நாள் ஆலப்புழா, இன்னொரு நாள்
 வீகாலாண்டு என்று முடிவானது.
கொண்டாட்டமாய் போனது அந்த 2 நாட்கள்.


நான் தூசான் வந்த பிறகு சரவணகுமார் அக்கா திருமணத்துக்காக நாமக்கல் செல்ல முடிவு செய்தோம். அதோடு சேர்த்து ஏற்காடு ஒகேனக்கல் என சுற்றுலா போய்விட்டு வந்தோம். (நாமக்கல் பயணத்தை தனியாக பதிவிட முடிவு செய்துள்ளேன்).

Presentation:
எனக்காக ஒரு டின்னர் பார்ட்டி ஏற்பாடு செய்தார்கள். எல்லாரும் சேர்ந்து எனக்கு ஒரு அழகான டைட்டன் வாட்ச் பரிசளித்தார்கள். அது இன்றும் என்னோடு இருக்கிறது. நான் அவர்களுக்கு அளித்த போட்டோ எல்லாரிடமும் இருக்கும் என்று நம்புகிறேன்.


2 comments:

  1. எப்படி ஞாபகம் இருக்கு இவ்ளோவும்.

    ReplyDelete