Tuesday, 26 January 2021

நா-ஏ-ஒ சுற்றுலா

சித்தாரில் இருந்து நண்பர்கள் புடைசூழ போன பயணம் தான். நாமக்கல் - ஏற்காடு - ஒகேனக்கல் சுற்றுலா.
இந்த சுற்றுலா தொடக்க புள்ளியில் இருந்தே ஒரு வித்தியாசமான பயணம்.

பலருக்கும் கோபம் வெளிப்பட்ட ஒரு பயணம்.
சுற்றுலா செல்லும் போது நான் தூசான்வாசியாகி விட்டேன்.
நாமக்கலில் சரவணகுமார் அக்கா திருமண ரிசப்ஷன். அங்கேயே உணவு தங்குமிடம் கிடைத்ததால் நாமக்கல் சென்றோம்.

ஏசி இல்லாமல் இருந்தால் வேன் வாடகை குறையும் என்று நான்-ஏசி வேன் புக் செய்தோம். ஏசி வேலை செய்யாத ஒரு வேனை அனுப்பியது டிராவல்ஸ்.
ஜன்னல்களை திறக்க முடியாது. காற்றும் உள்ளே வராது போன்ற வேன்.
சென்னையை விட்டு கிளம்பும் போதே மூச்சு முட்டுவது போல் இருந்தது. திறக்க முடிந்த ஒரு ஜன்னலை திறந்தால் மழை பெய்கிறது.
சென்னைக்கு வெளியே ஒரு உணவகத்தில் சாப்பிட்டு விட்டு கிளம்பினோம். அங்கே இருந்த நாயோடு சில பல போட்டோக்கள் எடுத்தார்கள் முத்துக்குமார் வகையறா.
கொஞ்ச நேரத்தில் வரதன் டிரைவரை திட்டுவது கேட்டது விசாரித்தால் டிரைவர் படம் பார்த்து கொண்டே வண்டி  ஓட்டினான்.
மீண்டும் கொஞ்ச நேரத்தில் டிரைவர் தூங்கி கொண்டே ஓட்டுவதாய் தகவல்.
நாமக்கல்ல நெருங்கும் நேரத்தில் வேன் நின்றது டீசல் இல்லாமல். டிரைவர் ரொம்ப நாட்களுக்கு பிறகு வண்டி ஓட்டுவதாக சொன்னான்.
இம்முறை திட்டியது ரிஸ்வான். நெடுஞ்சாலையில் ஒரு பேருந்தை கைகாட்டி நிறுத்தி டீசல் வாங்க டிரைவரை அனுப்பினோம். பஸ்ஸில் ஏறும் நேரத்தில் காசில்லை என்றான் . மீண்டும் திட்டி காசு கொடுத்து அனுப்பினோம்.
ரிஸ்வானும் டிரைவரும் சேர்த்து ஏர்லாக்கை சரி செய்தனர்.
டிரைவரை வேனில் தூங்க சொல்லிவிட்டு நாங்கள் மண்டபத்துக்கு சென்றோம்.
காலையில் குளித்து சாப்பிட்டுவிட்டு ஏற்காடு செல்ல கிளம்பினோம். கிளம்பும் முன் மண்டபத்து மாடியில் போட்டோக்கள்.
ஏற்காடு கிளம்பி வேன் கொஞ்ச தூரம் செல்லும் போதே மனோஜிடம் இருந்து அர்ச்சனை டிரைவருக்கு.
தூங்காமல் சிடி போட்டு படம் பார்த்ததன் விளைவு வேனை லைட்டாக அசைத்து பார்த்தது.
ஓரங்கட்டி எல்லாரும் டீ குடித்து கிளம்பினோம்.
ஏற்காடு மலை அடிவாரத்தில் புகைப்படம் எடுத்து கொண்டோம். கொண்டை ஊசிகளில் வளைய வளைய வாந்தி வருவது போல் தோன்றியது.
ஏற்காட்டில் வகைவகையாய் புகைப்படங்கள் எடுத்து திரும்பினோம்.

இறங்கும் போது பாய் வண்டிய நிறுத்தி வாந்தி எடுத்து கொண்டார். (பிரகாஷ்க்கு ஒரே சந்தோஷம்).
சேலத்தில் ரிஸ்வான் வீட்டுக்கு சென்றோம். அங்கு பிரியாணி, டீ.
அடுத்த நாள் காலையில் கிளம்பி ஒகேனக்கல் போனோம். போன உடனே மீன் குழம்பு சமைத்து தருவதாக சொன்னார்கள். மீன் வாங்குதில் எக்ஸ்பர்ட் ரெண்டு பேர் மீனும் அரிசியும் வாங்கி கொடுத்து விட்டு வந்தார்கள்.
நாலு பேர் காசு கொடுத்து அடி வாங்க (மசாஜ்) சென்றார்கள். 
பரிசல் கட்டணம் ரொம்ப அதிகமாக இருந்தது. அதனால் பரிசலில் சின்ன தூரம் மட்டுமே சென்றோம்.

சுவையான மீன் குழம்பு, ரசம் என சாப்பிட்டு கிளம்பினோம். 
வேன் டிரைவரை நினைத்தால் மட்டும் பயமாக இருந்தது.
நெடுஞ்சாலையில் புகைப்படம் எடுத்து கொள்ள நினைத்தோம். ஒரு பக்கம் மலை மறுபக்கம் வயல் என ஒரு மாலை மங்கும் நேரம் மாட்டியது. எல்லாவற்றையும் கேமராவுக்குள் திணித்து கிளம்பினோம்.

இரவு உணவுக்காக வேலூர் உள்ளே செல்ல சொன்னால் வேலூர் பைபாஸில் ஏறிவிட்டான் டிரைவர். 
ஒரு தள்ளுவண்டி கடையில் சாப்பிட்டு சென்னைக்கு திரும்பினோம்.
அது ஒரு அழகிய காலம்.
டீம்:
நான்
முத்து குமார்
வசந்த குமார்
ரிஸ்வான்
மனோஜ்
இளவரசன்
உபயதுல்லா
பிரகாஷ்
ஆண்டர்சன்
அருண் பிரசாத்
பழனிக்குமார்
தங்கராஜ்

1 comment: