Saturday, 9 January 2021

புயலிலே ஒரு தோணி

 முதல் முறையாக ஒரு புத்தகத்தை பத்தி எழுதுறேன். புயலிலே ஒரு தோணி நாவலை எழுதியவர் ப. சிங்காரம் அவர்கள்.

கமல் பிக்பாஸில் பரிந்துரைத்ததன் பேரிலும்,  டுவிட்டரில் வாசிக்க வேண்டிய 100 புத்தகங்கள் வரிசையில் இடம் பெற்ற புத்தகம் என்பதாலும் வாசிக்க துவங்கினேன்.

கதையில் இந்தியா, மலேசியா, இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து நாட்டில் நடப்பது போல் எழுதியுள்ளார். அவர் இதை எழுதிய ஆண்டு 1962, கதை வாசிக்கும் போது ப. சிங்காரம் இத்தனை இடங்களுக்கு சென்றுள்ளார் என்பது ஆச்சர்யப்பட வைக்கிறது.

அவர் காட்டியிருக்கும் மேற்கோள்கள் அவர் எவ்வளவு வாசித்திருப்பார் என்பதை காட்டுகிறது. ஆனால் இந்த நாவலுக்கு போதுமான வரவேற்பு இல்லாததால் அவர் இதற்கு பிறகு நாவல் எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கதை நாயகன் பாண்டியன் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணிபுரிகிறார். உலகப்போர் நடக்கும் சமயத்தில் நடப்பது போல் கதை.

நேதாஜியும் கதையில் வந்து போகிறார். பாண்டியன், எதையும் செய்யும் சாகசகாரன். நேதாஜிக்காக கடிதத்தை பெற்று வருவதில், யாமசாக்கியை திட்டம் போட்டு கொல்வதில், சுந்தரத்தை கொல்வதற்கு முன் அவனுக்கு அறிவுரை வழங்குவதில் பாண்டியன் மிளர்கிறான்.

கதை ஓட்டத்தில் நாமும் குதிரை வண்டியில் பயணிக்கிறோம். பாய்மர கப்பலில் கடல் கடக்கிறோம். இந்தோனேசிய வீதிகளில் நடக்கிறோம்.அதுதான் நாவலில் சிறப்பே.

நண்பர்கள் ஒரு கல்யாண மண்டபத்தில் உட்கார்ந்து அடிக்கும் அரட்டை ரசிக்க வைக்கிறது.

நாவலில் மலாய் உட்பட பிற மொழிகளிலும் பேசிக்கொள்கிறார்கள். (விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது). பாண்டியன் என்று பெயரை ஒவ்வொரு நாட்டினரும் எப்படி உச்சரிக்கிறார்கள் என்பதிலே தெரிகிறது.

நாவல் முழுக்க "புகை பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கனாது" என்று வைக்க வேண்டியுள்ளது.

கதையில் வரும் உரையாடலில் பல இடங்களில் யார் யாரோடு பேசுகிறார்கள் என்பது குழப்பமாக இருக்கிறது.

ஆர்வமுள்ளவர்கள் வாசிக்கலாம். மறு வாசிப்புக்கும் சிறந்த நாவல்.


No comments:

Post a Comment