நம் நாட்டின் சிறப்புரைக்கும் நாணயங்களின் தமிழகம் சம்மந்தப்பட்ட நாணயங்கள்.
1. 8வது உலக தமிழ் மாநாடு (திருவள்ளுவர் )
திருவள்ளுவர் உலகறிந்த தமிழ் புலவர். தமிழ் மொழியை இரண்டடி வெண்பாவால் அலங்கரித்தவர்.
8வது உலக தமிழ் மாநாடு தஞ்சையில் 1995ல் நடைபெற்றது. அதை முன்னிட்டு 1 ரூபாய், 2 ரூபாய் மற்றும் 5 ரூபாய் நாணயங்கள் வெளியிடப்பட்டன. நாணயத்தில் 8வது உலக தமிழ் மாநாடு என்று எழுதப்பட்டுள்ளது மற்றும் செயிண்ட் திருவள்ளுவர் என்றும் எழுதப்பட்டுள்ளது.
2. கர்மவீரர் காமராசர்
காமராஜர் தமிழக முன்னாள் முதல்வர். அரசியலில் கிங் மேக்கர் என்று போற்றப்பட்டவர்.
காமராசர் நூற்றாண்டை முன்னிட்டு 2004ல் 5 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது.
அதில் கே. காமராஜ் என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.
3. பேரறிஞர் அண்ணா
தமிழக முன்னாள் முதல்வர். திராவிட முன்னேற்றக் கழகத்தை துவங்கியவர்.
அண்ணா நூற்றாண்டை முன்னிட்டு பேரறிஞர் அண்ணா என்ற வாசகம் எழுதிய 5 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது.
அதில் அண்ணாவின் கையெழுத்தும் இடம் பெற்றுள்ளது.
வெளியிட்டவர் - பிரனாப் முகர்ஜி
4. சி. சுப்பிரமணியம்
சுதந்திர போராட்ட தியாகி, முன்னாள் அமைச்சர், முன்னாள் கவர்னர்.
பசுமை புரட்சியில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது.
1998ல் பாரதரத்னா விருது பெற்றவர்.
இவரது நூற்றாண்டை முன்னிட்டு 2010ல் 5 ரூபாய் வெளியிடப்பட்டது.
வெளியிட்டவர் - பிரனாப் முகர்ஜி.
புழக்கத்தில் விடப்பட்ட நாணயம் என்றாலும் கிடைப்பது அரிதான நாணயம்.
5. தஞ்சை பெரிய கோயில்
ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில் கட்டி 1000 ஆண்டு ஆனதை முன்னிட்டு 2010ல் 5 ரூபாய் வெளியிடப்பட்டது.
வெளியிட்டவர் - கருணாநிதி
No comments:
Post a Comment