Saturday, 25 January 2025

பத்மபூசனுக்கு

அமராவதியில் ஆரம்பம்

குட் பேட் அக்லி வரை

கலைத்துறையில் நீ படைத்த

வரலாறுக்கு உன்னைத்தேடி

வந்துள்ளது பத்மபூசன்.

விருது பெற இருக்கும்

ஆசை நாயகன் அஜித்ஜிக்கு 

விஸ்வாசம் மிக்க ரசிகனின் கடிதம்!

ராஜாவின் பார்வையிலே பட்டுவிட

கல்லூரி வாசலில் 

வான்மதி, பவித்ரா என 

ரெட்டை ஜடை வயசு பெண்களை

காத்திருக்க வைத்த

மைனர் மாப்பிள்ளை நீ !

காதல் கோட்டையில் 

காதல் மன்னாக பிரேம புஸ்தகம் 

படித்தவன் நீ !

அவள் வருவாளா 

என்னை தாலாட்ட வருவாளா,

என்று காத்திருந்த உன்னிடம் 

ஷாலினி சொன்னது,

உன்னைக் கொடு என்னைத் தருவேன் என்று 

உனது பதில்

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் என்று

அன்று முதல் ஷாலினி வீட்டு 

தோட்டத்தில் பூவெல்லாம் உன் வாசம்,

என் வீடு என் கணவர் என்று

பெருமிதம் கொண்ட ஷாலினி

வாழ்வெல்லாம் ஆனந்த பூங்காற்றே !

உனது பகைவன்கள், வில்லன்கள்

உன்னை பழித்த ஊடகங்களுக்கு

ஆஞ்சநேயாவாக வலிமையை

காட்டியது உன் துணிவு !

தெரிந்த கதையை வைத்தே

மாஸ் காட்டியது பில்லா

ராஜா, ஜனா, தீனா, அசோகா, வாலி

பரமசிவன், ஆழ்வார், திருப்பதி

என்ற அடைமொழியுடன் 

திரியும் ரசிகர்களின்

மனதில் நீங்கா இடம் பெற்றது 

பில்லா II !

தொழிலாளர் நலனில்

நீ காட்டுவது நேர்கொண்ட பார்வை

தீங்கான விளம்பரங்களுக்கு

நீ காட்டியது ரெட் கார்டு !

அட்டகாசமாக அமர்க்களமாக 

சென்ற நேசம் மிகுந்த

உன் வாழ்வில் உயிரோடு உயிராக 

பிறந்த அசல் வாரிசுகள் 

அனோஷ்கா & ஆத்விக் !

மற்றவர்கள் உல்லாசமாக 

மங்காத்தா விளையாட

நீ தேர்வு செய்து சாதித்தது

துப்பாக்கி சுடும் போட்டியில் !

நீ வருவாய் என 

நிறைய தயாரிப்பாளர்கள் 

காத்திருக்க உன் சிறுவயது

கனவான ரேஸ்

வேதாளமாய் உன் தோளில் 

களத்தில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்றாய்

விடாமுயற்சியால் 53 வயதில்

வென்றாய்

இந்திய சிட்டிசனாய்

பெருமை சேர்த்தாய் !

ஏகன் இறைவன் ஆசியால்

இந்த ஆண்டு உனக்கு

ராசியான ஆண்டு 

இங்கிலீஷ் விங்கிலீஷ் நாடுகளில் 

இன்னும் பல கிரீடம் சூட போகிறாய் !

என்னை அறிந்தால் உன்

குடும்பத்தை முதலில் கவனி

அதுவே வீரமான விவேகம் என்றாய் !

அதற்காகவே இந்த 

பாசமலர்களின் அன்பு 

என்றும் தொடரும் !!!





No comments:

Post a Comment