Friday, 29 July 2022

பயணம்

பொதுவாக தமிழர்களுக்கு பயணங்கள் என்பது கோவிலுக்கு செல்வது தான். அந்த பயணங்கள் செலவு வைத்தாலும் புத்துணர்வு தரக் கூடியவை.

மேற்கத்திய நாடுகளில் கிறிஸ்துமஸ் தொடங்கி புத்தாண்டை தாண்டி பத்து நாட்கள் வரை விடுமுறை உண்டு. அதனால் அவர்களுக்கு பெரிய பயணங்கள் சாத்தியம்.
நமக்கு தொடர்ச்சியாக மூணு நாள் விடுமுறை என்பதே பொங்கலுக்கு மட்டும் தான்.

குழந்தை இல்லாதவர்களை அந்த கோவிலுக்கு / இந்த கோவிலுக்கு போய்ட்டு வா, குழந்தை பிறக்கும் என்பார்கள். நிச்சயம் நடக்கும். காரணம் புது இடம் இறுக்கமான சூழலை தளர்த்தி நல்ல புத்துணர்வு தரும். வீட்டில் இருக்கும் போது ஒவ்வொரு மாதமும் பெண்களை கேள்விகளால் குடைய சொந்தங்கள் உண்டு. ஆண்களுக்கும் ஏதாவது விசேஷம் உண்டா என்று கேட்கும் கும்பல் உண்டு. இதனால் ஏற்படும் மன இறுக்கம் மனைவியோடு புதிய இடத்திற்கு செல்வதால் குறையும்.

வாழ்க்கை பிடிப்பில்லாமல் போய் விரக்தி அடைந்தவர்கள் கூட வள்ளலார் சன்மார்க்க நிலையமோ, பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமமோ சென்று தெளிவு பெற்றதாக கேள்வி பட்டுள்ளேன்.

ஆட்டோகிராப், வாரணம் ஆயிரம் போன்ற படங்களில் இதுவே காட்சி படுத்தப்பட்டுள்ளது. (கற்றது தமிழில் எதிர்மறை காட்சிகள்).

தமிழகத்தை தாண்டி தமிழர்கள் பயணம் செல்ல பெரிதும் விரும்புவதில்லை. காரணம் மொழி பிரச்சினை. கல்லூரி காலத்தில் எல்லாருக்கும் ஒரு கனவு இருக்கும். கோவா பயணம். பெரிய திட்டமிடல் இருந்தாலும் கனவாகவே போய் இருக்கும்.

தொழில்நுட்பம் வளர்ந்த இந்த காலத்தில் மொழி பிரச்சினை இல்லை. வசதிக்கு தகுந்தவாறு பிற மாநிலங்களுக்கு பயணிக்கலாம். அதே சமயம் தமிழ்நாட்டில் நிறைய பார்க்காத அருவிகள், மலைகள், காடுகள், கடற்கரைகள் இருக்கும்.

ஆண்டுகளுக்கு மூன்று நான்கு நாட்கள் என ஒதுக்கி அதுக்காக பணமும் ஒதுக்கினால் நிச்சயம் பலன் இருக்கும்.

No comments:

Post a Comment