தீபாவளி என்றதும் நினைவில் வந்தவை பற்றிய தொகுப்பு.
தீபாவளி சனிக்கிழமை, வியாழக்கிழமை கருக்கல்ல நீ பொறந்த என்று அம்மா ஆண்டுதோறும் சொல்வது வழக்கம்.
தீபாவளி அன்று மழை பெய்யாவிட்டாலும் அம்மாவுக்கு வருத்தம் வரும்.
சிறு வயது முதல் தீபாவளிக்கு அம்மாவே எண்ணெய் தேய்த்து விடுவாங்க. எப்போதும் தேங்காய் எண்ணெய் தான். ஷாம்பூ கிடையாது, மாருதி மார்க் சீயக்காய் பொடி தான். பத்தாம் வகுப்புக்கு பிறகே ஷாம்பூ. திருமணத்திற்கு பிறகு மனைவி கையால் தேங்காய் எண்ணெய்.
பெரிய அக்காவின் தலை தீபாவளிக்கு மாமா எக்கச்சக்க வெடி வாங்கி வந்திருந்தார். கிட்டதட்ட மூன்று வருசம் அந்த வெடிகள் இருந்தது. தாத்தா தோட்டத்தில் கொக்கு கலைக்கவும் பயன்படுத்தி கொண்டார்.
அன்று இரவு எரிந்து போன சூரியகாந்தி வெடியில்( கம்பி மத்தாப்பு) காலை வைத்து சுட்டு கொண்டேன்.
இன்னொரு தீபாவளிக்கு கத்திரிப்பூ கலரில் சட்டை போட்டு வீட்டின் முன்னே ஒரு மிளகாய் வற்றல் வெடி வைத்தேன். அது வெடித்து பறந்து வந்து தன் சட்டையில் ரெண்டு சின்ன ஓட்டை போட்டது. அன்று முதல் வெடி வைப்பதில் விருப்பம் இல்லை.
எப்போதும் கடையில் ஆர்டர் கொடுத்து தாத்தா வடை வாங்கி வந்துவிடுவார். காலையில் சாப்பிட்டு விட்டு விளையாட பாண்டி வீட்டிற்கு சென்றால் பாப்பா அத்தை தயாரித்த வடை காத்திருக்கும்.
சின்ன அக்காவின் தலை தீபாவளிக்கு தான் எங்கள் தோட்ட கிணற்றில் இறங்கி குளத்தேன். நீச்சல் கற்றபின் அன்று தான் முதல் முறை.
எங்கள் தலை தீபாவளிக்கு எனக்கு பிடித்தமான வயலெட் நிற சட்டை. மனைவிக்கு பச்சை நிற சுடிதார்.
சென்னைக்கு வந்த பின் முதல் தீபாவளி வெள்ளிக்கிழமை வந்தது. திங்கட்கிழமை சாயங்காலம் ஊருக்கு செல்ல நண்பன் ஜெகதீசிடம் டிக்கெட் இருந்தது. லீவு கேட்டால் சைட் மேனேஜர் தரவில்லை. அன்று முதல் நான் சைட் மேனேஜரிடம் கேட்டு விட்டு லீவு போடுவதில்லை. லீவு போட்டபின் சொல்வது என்ற நடைமுறைக்கு மாறினேன்.
சில ஆண்டுகளாக தீபாவளி முன்பதிவு என்ற குதிரை ரேஸில் இறங்குவதில்லை. சென்னையில் தான் தீபாவளி. வெளியில் இருந்து கேட்கும் வெடி சத்தங்கள், ஹேப்பி தீபாவளி வாட்சப் மேஸேக்கள், டிவியில் படங்கள் என செல்கிறது.
கடந்த இரண்டு தீபாவளியும் மனைவியின் அக்கா வீட்டில் குட்டீஸ் மகிழ்ச்சியோடு.
No comments:
Post a Comment