நாட்குறிப்பு எழுதும் பழக்கத்தை
கைவிட்ட நான் நீண்ட
நாள்களுக்கு பிறகு எழுதுகிறேன் !
ஊருக்கு கிளம்ப வீட்டிலிருந்து
ரயில் நிலையம் செல்ல
மகிழுந்தை அழைத்திருந்தேன் !
அவர் வரும் வந்த சாலை மோசமாக
இருந்ததால் மகிழுந்து ஓட்டுனருக்கு
மகிழ்ச்சி இல்லை !
அடுத்த தெருவில் ஒரு
அடுக்கு மாடிக் குடியிருப்பின்
வாகன நிறுத்துமிடத்தில்
குளிர்சாதன பெட்டியில்
ஒரு உடலை வைத்திருந்தார்கள் !
உடலை சுற்றி மூவர் மட்டுமே !
இறந்த மனிதர் என்ன சம்பாதித்தாரோ
மனிதர்களை கூட சம்பாதிக்கவில்லையே
என்று மனம் வருந்தியது !
ரயில் நிலையத்தில் மின்னேனியில்
பாட்டியை ஏற்ற பல கதைகள்
சொல்லி பேத்திகள் கூட்டி
சென்றனர்
பேத்திகள் கதை சொல்லும் காலம் !
ரயிலில் எதிர் இருக்கையில்
உயவு செய்யப்படாத
கனரக வாகனத்தின்
இயக்கத்தை போல
இடைவிடாது குரட்டை
விட்டுக்கொண்டு இருந்தார் ஒருவர்.
எப்போது தூங்கினேன் என்று
தெரியவில்லை.
அடுத்த நாள் விடியலிலே
விழித்தேன் !!!
No comments:
Post a Comment