Friday, 22 October 2021

நாட்குறிப்பு

நாட்குறிப்பு எழுதும் பழக்கத்தை

கைவிட்ட நான் நீண்ட

நாள்களுக்கு பிறகு எழுதுகிறேன் !

ஊருக்கு கிளம்ப வீட்டிலிருந்து

ரயில் நிலையம் செல்ல 

மகிழுந்தை அழைத்திருந்தேன் !

அவர் வரும் வந்த சாலை மோசமாக 

இருந்ததால் மகிழுந்து ஓட்டுனருக்கு 

மகிழ்ச்சி இல்லை ! 

அடுத்த தெருவில் ஒரு 

அடுக்கு மாடிக் குடியிருப்பின் 

வாகன நிறுத்துமிடத்தில் 

குளிர்சாதன பெட்டியில் 

ஒரு உடலை வைத்திருந்தார்கள் !

உடலை சுற்றி மூவர் மட்டுமே !

இறந்த மனிதர் என்ன சம்பாதித்தாரோ 

மனிதர்களை கூட சம்பாதிக்கவில்லையே 

என்று மனம் வருந்தியது !

ரயில் நிலையத்தில் மின்னேனியில் 

பாட்டியை ஏற்ற பல கதைகள் 

சொல்லி பேத்திகள் கூட்டி 

சென்றனர் 

பேத்திகள் கதை சொல்லும் காலம் !

ரயிலில் எதிர் இருக்கையில் 

உயவு செய்யப்படாத 

கனரக வாகனத்தின் 

இயக்கத்தை போல 

இடைவிடாது குரட்டை 

விட்டுக்கொண்டு இருந்தார் ஒருவர்.

எப்போது தூங்கினேன் என்று

தெரியவில்லை. 

அடுத்த நாள் விடியலிலே 

விழித்தேன் !!!




No comments:

Post a Comment