50களில் எழுதப்பட்ட குறுநாவல். சி.சு. செல்லப்பா மாட்டுக்கும் மனிதனுக்குமான வீர விளையாட்டை பற்றி எழுதியுள்ளார்.
ஒரு ஐயர் வீட்டில் பிறந்து அவர் ஜல்லிக்கட்டின் நுட்பங்களை எப்படி தெரிந்து கொண்டார் என்பதே வியக்க வைக்கிறது.
திமிறி ஓடும் மாடு, அதன் மேல் பாயும் மனிதர்கள் என டிவியில் பார்க்கும் ஜல்லிக்கட்டில் எவ்வளவு நுட்பம் உள்ளது என்பதை சொல்கிறது வாடிவாசல்.
மாட்டுக்கும் மனிதனுக்குமான வெற்றி, சுதாரித்து கொள்ளும் சில விநாடிகளில் தான் உள்ளது என்பதை சுவாரஸ்யமாக சொல்கிறார்.
இந்த கால எழுத்தாளர்களுக்கு இவ்வளவு நுட்பம் தெரிந்திருந்தால் இரண்டாயிரம் பக்க நாவலை எழுதி இருப்பார்கள்.
சி.சு. செல்லப்பா, தேவையற்ற வர்ணனைகள் எதுவும் எழுதவில்லை, கிளைக் கதைகளையும் எழுதவில்லை. ஜல்லிக்கட்டு களத்தில் நடப்பவை பற்றி மட்டுமே சொல்லியுள்ளார்.
ஒரு பரபரப்பான கிரிக்கெட் பார்ப்பது போன்ற அனுபவத்தை தருகிறது வாடிவாசல்.
பிச்சி, மருதன், கிழவன், காரி, ஜமீன்தார் இவர்களை வைத்து வாடிவாசலிலே முழுக்கதையும் நடப்பது போல் எழுதியுள்ளது சிறப்பு.
காரியின் மூச்சு காற்று எப்படி உள்ளத்தென்றும், பிச்சி அதன் கொம்பில் ரத்தத்தின் வாசத்தை உணர்கிறான் என்றும் மண்வாசனை நிரப்புகிறார் சி.சு.செல்லப்பா
No comments:
Post a Comment