பதினைந்து ஆண்டுகள்
நீலநிற ஆடை அணிந்து
வானளாவிய வெற்றிகளை
பெற்றவன் நீ !
நாங்கள் வெறுத்த மஞ்சள்நிற
ஆடையை ரசிக்க
வைத்தவன் நீ !
ராஞ்சி நகரை இந்தியர்களுக்கு
அறிமுகம் செய்தவன் நீ !
கிரிக்கெட்டை நேசிக்கும்
எங்களுக்கு மீண்டும்
ஒரு உலகக் கோப்பை
பெற்று தந்தவன் நீ !
தலைமை பண்பால்
மேலாண்மை பாடத்திட்டத்தில்
இடம்பெற வேண்டியவன் நீ !
பொறுமைக்கும் அமைதிக்கும்
பேருதாரணம் நீ !
பத்திரிகையாளரை பக்கத்தில்
வர சொல்லி ஓய்வு பற்றி
பாடம் நடத்தியவன் நீ !
உனது முதல் ரன்அவுட்
எனது கண்களுக்கு
எட்டவில்லை !
கடைசி ரன்அவுட் கண்களை
குளமாக்கி மனதை
ரணமாக்கியது !
இனி களத்தில் உன்னை
காண முடியாது
என்றும் எங்கள் தலைவன் நீ !
வாழ்க பல்லாண்டு !!!
No comments:
Post a Comment