Sunday, 30 May 2021

9/100 கல்வி தடங்கள்

கருவேலமர காட்டு 

ஒத்தையடி பாதையில்

நடந்து சென்றது 

இந்து தொடக்கப் பள்ளிக்கு !

குளத்தின் கரையிலும் 

வற்றினால் குளத்தினுள்ளும் 

நடந்து சென்றது 

காந்தி வித்தியாலயா 

இந்து தொடக்கப் பள்ளிக்கு !

அடுத்தது புனித யோவான்

உயர்நிலை பள்ளி, 

சீருடைகள் அணிந்து 

புத்தகமூட்டை சுமந்து செல்லும்

பலரோடு வாகன இரைச்சல்மிக்க 

தெற்கு பஜாரில் நடந்தது !

கதீட்ரல் முன்பு கடக்க கடினமான

சாலையை கடந்து சென்றது !

3A பேருந்தில் ஏறி செல்ல 

வேண்டும் எனக்கும்,

என்னை சாலையை கடந்து விட 

வேண்டும் என்று அண்ணனுக்கும் 

விதிக்கப்பட்ட நிபந்தனைகள் !

அவன் அதிகம் சாலையை 

கடந்துவிடுவதில்லை 

என்னையொத்த சிறுவனின் 

விபத்தை கேள்விபட்டதிலிருந்து 

தினமும் சாலையை கடந்து விட்டான் !

பெருமாள் புரத்தில் இருந்து 

காலையில் ஒரே பேருந்து 

கிடைத்துவிடும். 

மாலையில் பஸ் பாஸோடு 

பாளை பேருந்து நிலையத்தில் 

5 S/V பஸ் ஏறிவிடுவது !

மகாராஜநகர் தடங்கலில்லா

பேருந்து வழித்தடம் 

நான் ஒன்பதாம் வகுப்பு

வந்திருந்தது !

பள்ளிக்குள்ளே இருக்கும்

விடுதியில் சேர்ந்த பின் 

மதிய உணவுக்கு பின்

பவுடர் பூசி வரக்கூட 

நேரமிருந்தது !

நூருல் இஸ்லாம்

பொறியியல் கல்லூரி

மலையடிவாரத்தில்

சீவி விடப்பட்ட ரப்பர் மரங்கள் 

பூத்து குலுங்கும் தொட்டி  

செடிகளுக்கு நடுவே 

மேலேறி செல்லும் தார் சாலை 

சைட் அடித்து கொண்டே

எல்லாத்துறைகளையும் கடந்தபின் 

உச்சாணியில் எங்கள் துறை 

எந்திர பொறியியல் !

மழைகாலத்தில் மலையில் 

இருந்து விழும் சின்ன 

அருவிகளை பார்த்து கொண்டே 

நடப்போம் மூச்சு வாங்க !!!


























No comments:

Post a Comment