கருவேலமர காட்டு
ஒத்தையடி பாதையில்
நடந்து சென்றது
இந்து தொடக்கப் பள்ளிக்கு !
குளத்தின் கரையிலும்
வற்றினால் குளத்தினுள்ளும்
நடந்து சென்றது
காந்தி வித்தியாலயா
இந்து தொடக்கப் பள்ளிக்கு !
அடுத்தது புனித யோவான்
உயர்நிலை பள்ளி,
சீருடைகள் அணிந்து
புத்தகமூட்டை சுமந்து செல்லும்
பலரோடு வாகன இரைச்சல்மிக்க
தெற்கு பஜாரில் நடந்தது !
கதீட்ரல் முன்பு கடக்க கடினமான
சாலையை கடந்து சென்றது !
3A பேருந்தில் ஏறி செல்ல
வேண்டும் எனக்கும்,
என்னை சாலையை கடந்து விட
வேண்டும் என்று அண்ணனுக்கும்
விதிக்கப்பட்ட நிபந்தனைகள் !
அவன் அதிகம் சாலையை
கடந்துவிடுவதில்லை
என்னையொத்த சிறுவனின்
விபத்தை கேள்விபட்டதிலிருந்து
தினமும் சாலையை கடந்து விட்டான் !
பெருமாள் புரத்தில் இருந்து
காலையில் ஒரே பேருந்து
கிடைத்துவிடும்.
மாலையில் பஸ் பாஸோடு
பாளை பேருந்து நிலையத்தில்
5 S/V பஸ் ஏறிவிடுவது !
மகாராஜநகர் தடங்கலில்லா
பேருந்து வழித்தடம்
நான் ஒன்பதாம் வகுப்பு
வந்திருந்தது !
பள்ளிக்குள்ளே இருக்கும்
விடுதியில் சேர்ந்த பின்
மதிய உணவுக்கு பின்
பவுடர் பூசி வரக்கூட
நேரமிருந்தது !
நூருல் இஸ்லாம்
பொறியியல் கல்லூரி
மலையடிவாரத்தில்
சீவி விடப்பட்ட ரப்பர் மரங்கள்
பூத்து குலுங்கும் தொட்டி
செடிகளுக்கு நடுவே
மேலேறி செல்லும் தார் சாலை
சைட் அடித்து கொண்டே
எல்லாத்துறைகளையும் கடந்தபின்
உச்சாணியில் எங்கள் துறை
எந்திர பொறியியல் !
மழைகாலத்தில் மலையில்
இருந்து விழும் சின்ன
அருவிகளை பார்த்து கொண்டே
நடப்போம் மூச்சு வாங்க !!!
No comments:
Post a Comment