எல்லா கோவில்களிலும்
உண்டியலுக்கு பாதுகாப்பு
தேவை
பிள்ளையார் கோவிலில்
பிள்ளையாருக்கும்!!!
****
களிமண்ணுக்கும்
சாணிக்கும்
தன் உருவம் தந்து
கடவுளாக்குபவர்
யாணைமுகத்தான்!!!
****
பிள்ளையாருக்கும் சுண்டெலிக்குமான
இடைவெளியில் பலகாரங்களால்
நிரப்பி விடுகிறார்கள்
அவருக்கோ கொழுக்கட்டை
மட்டுமே விருப்பம்!!!
****
அருகம்புல்லை
அற்புதமான பொருளாக்கிய
கனவான்
இந்த கணபதி!!!
****
இவருக்கு சிதறு
தேங்காய் பிடிக்க
தேங்காய்கடைகாரர்
காட்டில் மழை
பெரிய பிள்ளையார்
கோயில் அருகில் இருக்கும்
சிறிய உணவகத்தில்
எப்போதும் கெட்டு போகாத
சட்னி கிடைக்கிறது!!!
****
பக்தர்களை தன் கையால்
தலையில் குட்டி கொள்ள
வைக்கும் வல்லமை
உள்ளவர் இந்த
விநாயகர்!!!
****
முதற்கடவுள் தான்
இவர் சன்னதியில்
அர்ச்சனையும் குறைவு
வருமானமும் குறைவு
என்கிறார்
பிள்ளையார் சன்னதி
அர்சகர்!!!
No comments:
Post a Comment