Wednesday, 27 August 2025

பிள்ளையார்

 எல்லா கோவில்களிலும்

உண்டியலுக்கு பாதுகாப்பு

தேவை

பிள்ளையார் கோவிலில்

பிள்ளையாருக்கும்!!! 

****

களிமண்ணுக்கும்

சாணிக்கும் 

தன் உருவம் தந்து

கடவுளாக்குபவர் 

யாணைமுகத்தான்!!! 

****

பிள்ளையாருக்கும் சுண்டெலிக்குமான

இடைவெளியில் பலகாரங்களால்

நிரப்பி விடுகிறார்கள்

அவருக்கோ கொழுக்கட்டை

மட்டுமே விருப்பம்!!! 

****

அருகம்புல்லை

அற்புதமான பொருளாக்கிய

கனவான்

இந்த கணபதி!!! 

****

இவருக்கு சிதறு 

தேங்காய் பிடிக்க

தேங்காய்கடைகாரர் 

காட்டில் மழை

பெரிய பிள்ளையார்

கோயில் அருகில் இருக்கும்

சிறிய உணவகத்தில்

எப்போதும் கெட்டு போகாத

சட்னி கிடைக்கிறது!!! 

****

பக்தர்களை தன் கையால்

தலையில் குட்டி கொள்ள

வைக்கும் வல்லமை

உள்ளவர் இந்த

விநாயகர்!!! 

****

முதற்கடவுள் தான்

இவர் சன்னதியில்

அர்ச்சனையும் குறைவு 

வருமானமும் குறைவு

என்கிறார்

பிள்ளையார் சன்னதி

அர்சகர்!!! 




No comments:

Post a Comment