2009ல் அந்த சாதனையை முறியடித்தவர் ஜிம்பாப்வே நாட்டை சார்ந்த சார்லஸ் கண்வண்ட்ரி. இவரும் 194 ரன்கள் தான் அடித்தார், ஆனால் அவுட் ஆகவில்லை. 2 வது ஓவரில் களமிறங்கி 50வது ஓவர் வரை களத்தில் நின்றார். அவருக்கு ரன்னர் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
44வது முடிவில் 140 ரன்கள் அடித்து இருந்தார்.45 மற்றும் 46 வது ஓவரில் தலா 16 ரன்கள் அடித்தார். 47 வது அதிகபட்ச ரன் அடித்த ஜிம்பாப்வே வீரர் ஆனார். 49வது ஓவர் முடிவில் 191 ரன்கள் அடித்திருந்தார்.
50வது முதல் பந்தில் ஒரு ரன் அடித்து நான் ஸ்ட்ரைக்கர் எண்ட் போனார். 2வது பந்தில் விக்கெட், மூன்றாவது பந்தில் கேப்டன் உட்சேயா பவுண்டரி அடித்தார். நான்காவது பந்தில் 2 ரன் அடித்தார். முட்டு கட்டை சொந்த கேப்டன் மூலமாக வந்தது. 5 வது பந்தில் உட்சேயா சிங்கிள் எடுக்க கடைசி பந்துக்கு ஸ்ட்ரைக் வந்தார். பங்களாதேஷ் கீப்பர் ஸ்டம்புக்கு அருகில் வந்தார்.
கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்தார், அவுட் ஆகாதததால் அதிகபட்ச ரன்கள் குவித்த வீரர் பட்டியலில் முதலிடம் வந்தார்.
அன்றைய போட்டி முடிவில் அவர் வசம் மூன்று உலக சாதனை இருந்தது.
1. ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ரன் குவித்த வீரர். [அடுத்த ஆண்டு பிப்ரவரியில் சச்சின் 200 ரன் அடித்த இந்த சாதனையை முறித்தார். தற்போது ரோகித் சர்மா வசம் உள்ளது].
2. முதல் (கன்னி) சதத்தில் அதிகபட்ச ரன் குவித்த வீரர். [தற்போது இஷான் கிஷான் 210 ரன்கள் அடித்து முறியடித்து விட்டார்].
3. தோல்வியுற்ற போட்டியில் அதிகபட்ச ரன் குவித்த வீரர். இந்த சாதனை தற்போது இவர் வசமே உள்ளது. ஆம் அந்த போட்டியில் ஜிம்பாப்வே அணி தோற்றுவிட்டது.
கண்வண்ட்ரியின் தந்தை கிரிக்கெட்டில் அம்பயர். கண்வண்ட்ரி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன். பகுதி நேர விக்கெட் கீப்பர். கண்ணாடி அணிந்து ஆடும் வீரர். பெரிதாக கிரிக்கெட் கேரியர் கிடையாது என்றாலும் நினைவில் நிற்கும் வீரர்.
No comments:
Post a Comment