இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் எப்போதும் அனல் பறப்பவை. ஆசிய கண்டத்தில் எப்போதும் வலிமையான அணிகள். பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு எப்போதும் ஆசிய அணிகளில் முதலிடத்தில் இருக்கும். இந்த ஆண்டு உலகக் கோப்பை இந்தியாவில் நடப்பதால் இரு அணிகளுக்கும் சாதகமான சூழ்நிலை.
அணிகளை பற்றிய ஒப்பீடை பார்ப்போம்.
டாப் 5
இரு அணிகளின் டாப் 5 பேட்ஸ்மேன்களும் பகுதி நேர பந்து வீச மாட்டார்கள். பந்து வீச தெரிந்தாலும், அவர்களை (ரோகித், கோலி, ஷமான், இப்திகார்) பந்துவீச வைக்க கேப்டனுக்கு தன்னம்பிக்கை கிடையாது. ஐந்து பேரும் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன்கள்.
இஷான் கிஷான்/ முகமது ரிஸ்வான்
கிஷான் துவக்க ஆட்டக்காரராக ஓரளவு விளையாட கூடியவர். துவக்க வீரராக களம் இறங்கினால் இடது கை வலது கை துவக்க ஆட்டம் இருக்கும். (உலகக் கோப்பை அணியில் இருப்பாரா என்பது சந்தேகமே) ஆனால் அணி நிர்வாகம் அதை விரும்பவில்லை.
ரிஸ்வானும் துவக்க வீரராக சாதித்து காட்டியவர். துவக்க வீரராக களம் இறங்கினால் இடது கை வலது கை காம்பினேஷன் கிடைக்கும். ஆனால் அணி நிர்வாகம் விரும்பவில்லை.
ரவீந்திர ஜடேஜா / சதாப் கான்
இருவரும் பவுலிங் ஆல்ரவுண்டர், பேட்டிங்கில் பெருசாக ஆட தேவை இருக்காது. ஆனால் பந்துவீச்சிலும் பீல்டிங்களிலும் 100% கொடுத்தால் அணி வெற்றி பாதையில் செல்லும்.
தாகூர் / முகமது நவாஸ்
ஒரு பந்து வீச்சாளரை மாற்ற வேண்டும் என்றால் முதல் தேர்வு இவர்கள் தான். முழுதாக பத்து ஓவர்கள் போடுவது கடினமே. கூடுதல் பேட்டிங் என்று காரணம் சொல்லி அணியில் ஒட்டிக் கொண்டு இருப்பவர்கள்.
ரோகித் சர்மா/ பாபர் அசாம்
கேப்டன்சியை பொறுத்தவரை பாபர் கடிவாளம் போட்ட குதிரை. முதல் பவர்ப்ளே வேகப்பந்து வீச்சாளர்கள். கடைசியிலும் அவர்களே. நடுவில் முழுக்க ஸ்பின்னர்கள் என்ற கடிவாள அணுகுமுறை. எல்லா நேரமும் பலனளிக்காது.
ரோகித் சர்மா பந்து வீச்சு மாற்றத்தை சிறப்பாக கையாள்பவர். ஆனால் கொஞ்ச காலமாக கேப்டன்சியில் சொதப்பி வருகிறார்.
No comments:
Post a Comment