வெங்கடேஷ்க்கு சொந்த ஊர், நாகர்கோவில் செட்டிகுளம். அக்கா வீடு பாளையங்கோட்டையில். ஒரு வாரத்திற்கான டிரஸ்ஸை கொடுத்து விடுவார்கள். சனி ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டுக்கு சென்று விடுவான். எங்கள் செட்டில் (+1 & +2) பளிச் என்ற வெள்ளை சட்டை போடுவது அவன் மட்டும் தான்.
மற்றவர்கள் எல்லோரும் அவர்களுக்கு உள்ளே பேசி விளையாடி கொண்டிருக்கையில் வெங்கடேஷ் மட்டும் தான் எங்களோடு பேசி கொண்டு இருப்பான்.
எந்த நேரத்திலும் அவனிடம் மணி கேட்கலாம். அவனிடம் இருக்கும் ப்ரைலி வாட்ச் மூலம் பார்த்து சொல்வான். வாட்ச்சை குளிக்கும் போது மட்டுமே கழட்டுவான்.
விடுதி ஸ்டடியில் பார்வையற்றோர்களுக்கு தனி அறை என்பதால் அப்போது மட்டும் அவனிடம் பேச முடியாது.
கையை பிடித்தே, ப்ளசிங்கா, பழனியா என்று சொல்வான். எப்படிடா என்றால் கையிலுள்ள சூடு தான் கணக்கீடு என்பான்.
வின்னர் படத்தின் தயாரிப்பாளர் அவனது பக்கத்து வீட்டுக்காரர். படத்தை தியேட்டரில் பாருடா, ரொம்ப கஷ்டப்பட்டுட்டார் என சொல்லிக் கொண்டே இருந்தான். நாங்கள் +2 முடிக்கும் வரை அந்த படம் வெளிவந்த சுவடே தெரியவில்லை.
பயாலாஜி தேர்வு நாளில் எனக்கு விடுமுறை இருக்கும். அன்று அவனுக்கு காமர்ஸ் தேர்வு இருக்கும். நீ ஒருவாட்டியாவது வந்து தேர்வு எழுதி கொடு என்று சொல்வான். நானும் தட்டி கழித்து கொண்டே இருந்தேன். இன்று நினைக்கும் போது கஷ்டமாக உள்ளது.
+2 பொது தேர்வு எழுத அக்கவுண்ட்ஸ் டீச்சர் யாராவது வந்தால் மற்ற பாடங்களையும் ஓரளவு எழுதி விடுவார்கள். கடவுளை வேண்டிக்கோ என்று சொல்வான். பொது தேர்வு எழுத அக்கவுண்ட்ஸ் ஆசிரியர் வரவில்லை. ஆனால் வெங்கடேஷ் ஓரளவு படிக்க கூடியவன் தான்.
அவனை வீட்டில் வெங்கி என்றே கூப்பிடுவார்களாம், எங்களையும் வெங்கி என்று கூப்பிட சொல்வான். நாங்கள் கூப்பிட்டதில்லை.
5ம் அறை விடுதி நாட்கள் மறக்கமுடியாதவை.
முகப்புத்தகத்தில் பார்த்த வெங்கடேஷ்ன் போட்டோ பல நினைவுகளை மீட்டு எடுத்தது.
கனரா வங்கியில் வெங்கி மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது.
No comments:
Post a Comment