Saturday, 13 May 2023

2011 - நண்பர்கள் சந்திப்பு

அடிக்கடி மெரினாவில் சந்திப்பது அதிகப்பட்ச சந்திப்பாக இருந்தது. கல்லூரி முடித்திருந்தாலும் கல்லூரியின் வாசம் நாசிக்குள் நிறைந்திருந்த நாட்கள் அவை.



ஜென்னரும் விஜய்யும் மாத்தி யோசித்ததில் உதயமான சிந்தனை ஏற்காடு சுற்றுலா. புத்தாண்டை எல்லாரும் 1 ம் தேதி நள்ளிரவு கொண்டாடுவார்கள்,  நாம் பகலில் கொண்டாடுவோம் என்று முடிவு.

விஜய், ஜென்னர், ஷிபு, பிராவின், ப்ரீஸ், ஜானகி, தர்மா நான் ஒரே காரில் புறப்பட்டோம் சென்னையில் இருந்து. போகிற வழியில் ஒகேனக்கல் சென்றோம்.

ஒகேனக்கல்லில் அருமையான அருவி குளியல் அமைந்தது. மச்சான் தண்ணிக்குள்ளும் புகைப்படம் எடுக்கும் கேமரா கொண்டு வந்திருந்தான். 

தண்ணீரில் ஒவ்வொருவரையும் தூக்கி கீழே போடும் நிகழ்வு மச்சானையும், ஜென்னரையும் தூக்கியாச்சு. ஆனால் பிராவினை தூக்க முயற்சிக்கவில்லை, அத்தனை பேரும் பொறியியல் படிப்பை முடித்திருந்ததால்.

அங்கிருந்து ஏற்காடு சென்றோம். இரவில் ஏற்காடு சில்லென்று இருந்தது. ஜென்னர் விலை குறைவான அறை விசாரித்து தங்க ஏற்பாடு செய்தான். ஜென்னர் முதல் முறையாக மெஸ் கமிட்டி தவிர்த்து இதர கமிட்டி வேலை பார்த்த நாள் 01. 01.2011.



கணபதி அவன் அறைத்தோழர்களோடு காரில் ஏற்காடு வந்து சேர்ந்தான். கூடவே கார்த்தியும். அங்கு ஒரு அருவிக்கு சென்றோம். சற்றே ரிஸ்கான இடம் ஆனால் வாலிப வயசு. பாறை மீதேறி பரவச குளியல் போட்டோம்.

அதற்கு பிறகு வியூ பாயிண்டில் புகைப்படங்கள். மச்சான் வழக்கம் போல் ஸ்கார்பியோ காரின் சக்கரங்களை வேறுவேறு கோணங்களில் புகைப்படம் எடுத்தான். எதற்கு என்று கேட்டதற்கு அவன் சொல்லிய பதில், வினோத் பாபு வகுப்பு போல் விளங்கவே இல்லை.



மீண்டும் சென்னைக்கு வந்தோம். அரட்டையும் கும்மாளமுமாக. 

மீண்டும் கிடைக்காத நாட்கள் அவை.

No comments:

Post a Comment