பாஸ்கரன் தான் எங்கள் செட்டில் முதலில் திருமணம் செய்தவன். அதனால் அவன் திருமணத்துக்கு கிட்டத்தட்ட அனைவரும் போய் இருந்தோம்.
சரவணகுமார் தான் ஏற்பாடுகள் பண்ணது. பாஸ்கரன் கிட்ட ஏற்கனவே சொல்லி இருந்தோம், படகில் கடலுக்குள் அழைத்து செல்ல வேண்டும் என்று.
சென்னையில் இருந்து அரசு விரைவு பேருந்தில் பயணித்தோம். பேருந்து கிழக்கு கடற்கரையில் சாலையில் உத்தண்டியை அடைந்த போது பழுதடைந்தது. மாற்று பேருந்து வரும் வரை சாலையில் உட்கார்ந்து உருண்டு புரண்டு பொழுதை கழித்தோம். இரண்டு மணி நேரம் கழித்து தான் மாற்று பேருந்து வந்தது.
காலையில் பாஸ்கரன் ஊருக்கு சென்றோம். பாஸ்கரன் படகில் கடலுக்குள் அழைத்து சென்றான், கூடவே ரெண்டு பேர் துணைக்கு வந்தார்கள். நாங்கள் சென்ற நேரம் கடற்கரை சகதியாக இருந்தது. அதை கடந்து தான் படகேற வேண்டிய சூழல். படகு ஓரளவுக்கு கடலுக்குள் சென்றுவிட்டது. சுற்றிலும் நீல நிறம் கடலில் விழுந்து குளித்தோம், களித்தோம்.
கரைக்கு கிளம்பும் போது எஞ்சினில் இருந்து வெண்ணிற புகை. ஆயில் இல்லை. யார் அலைபேசியிலும் நெட்வொர்க் இல்லை. படகோட்டிகள் சுதாரித்து பாயை கட்டி கடற்கரை நோக்கி செலுத்தினர். காற்றுக்கு பொறுக்க முடியவில்லை எதிர் திசையில் வீசியது, பாயை சுருட்டினர். அதிர்ஷ்டவசமாக (அந்த பயணத்தில் நிகழ்ந்த ஒரே அதிர்ஷ்ட நிகழ்வு) பாஸ்கரன் அலைபேசியில் தொடர்பு கிடைத்தது.
கரையில் இருந்து இன்னொரு படகு காப்பற்ற வந்தது. அந்த படகில் இருந்து கயிறு கட்டி கரைக்கு இழுத்தனர். கரையை நெருங்குகையில் அந்த படகின் மீது எங்கள் படகு மோதி சேதாரம் செய்தது.
பொரித்த மீன் சாப்பிட நினைத்தோம், ஆனால் அது மீன்பிடி தடைக்காலம். சிறிய அளவில் தூண்டில் மீன் சாப்பாடு கிடைத்தது.
அன்றிறவு நாகப்பட்டினத்தில் மண்டபத்தில் தங்கினோம். காலையில் எழுந்து வேளாங்கண்ணி சென்றோம் நானும் வரதனும். வரும் வழியில் பேருந்து பஞ்சர்.
மாலையில் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்றோம். அங்கு யாரோ ஒருவரின் அலைபேசியை தொலைத்து விட்டு மீட்டெடுத்தோம்.
பாஸ்கரன் திருமண பயணம் என்பது தொடங்கியதில் இருந்து இறுதி வரை பீடை.
எங்கள் குழு :
நான், ரிஸ்வான், சுரேஷ், தங்கம், வரதன், முத்து, பிரகாஷ், பாய், சரவணகுமார், இர்பான், மணிகண்டன் இன்னும் சிலர்.
No comments:
Post a Comment