Tuesday, 19 February 2019

மகளதிகாரம்

வீடு புகுந்து திருடும்
திருடனை போல
காலையில் எந்த சத்தமும்
வந்து விடாமல் அலுவலகம்
கிளம்புகிறேன்.
அலுவலகம் முடிந்து வீடு
திரும்பியதும் குற்றவாளியாய்
அவள் முன் ஆஜர் படுத்தப்படுகிறேன்.

சின்ன பிரண்டல்கள்
செல்ல கடிகள்
நெஞ்சில் உதைகள்
இந்த தண்டனைகள் போதாதென்று
மொழி தெரியாத மொழியில்
வசைகள் வேறு.

அவள் தூங்கிய பின்தான்
நான் தூங்க வேண்டும்
என்ற சட்டம் வேறு.

மகளதிகாரம்!!!

2 comments: