Thursday, 12 April 2018

காக்கையின் கவலை

மாநகர் ரயில் நிலையத்தில்
கூடு கட்டி கொண்ட
காக்கையின் கவலைகள்!

ஓயாமல் ஒலித்து கொண்டிருக்கும்
அறிவிப்புகளால் தன் குஞ்சு
டிங் டிங் டிங் என்று கரைய
ஆரம்பித்துவிடுமோ
என்றொரு கவலை!

சைவ அசைவ உணவுகள்
கொட்டிக்கிடக்கும் குப்பைத்தொட்டியில்
மக்காத நெகிழியை தன் குஞ்சு
எப்படி பிரித்துண்ணும்
 என்றொரு கவலை!

அலட்சியத்தால் மூடாமல்
விட்ட தண்ணீர் குழாயில்
 தன் குஞ்சு நீரறுந்தும் காட்சியை
யாராவது புகைப்படம்
எடுத்து வதனப் புத்தகத்தில்
பதிவிட்டால் திருஷ்டி பட்டுவிடுமே
 என்றொரு கவலை!

தன் குஞ்சு எச்சமிடும் இடத்தில்
சொச் பாரத்தில் குறை என்று
கூட்டை கலைத்து விடுவார்களோ
என்றொரு கவலை!

மாறிவிட்ட மனிதர்களை
பார்த்து தன் குஞ்சு கூடி
உண்ணும் இயல்பை தொலைத்து விடுமோ
என்றொரு கவலை!!!

No comments:

Post a Comment