Wednesday, 4 October 2017

கருணை காட்டு கடவுளே!!!

வடிகால் வசதி இல்லாத
மாநகரத்தில் கொட்டி தீர்க்கிறது
மழை!
குளத்தை தூர்வாரிவிட்டு
வரத்து கால்களை
சரி செய்து காத்திருக்கும்
கிராமங்களை மழை
ஏமாற்றுகிறது!
தண்ணீரை நாங்கள்
பாசனத்துக்கே பயன்படுத்துகிறோம்
ஒரு போதும் பாழ்படுத்துவதில்லை!
குடிநீருக்காக பல மைல்
தூரம் அலையும் நாங்களா
வீணடிப்போம்!
நாங்கள் தண்ணீரை கலன்களில்
அடைத்து விற்கவில்லை.
கழனியை நனைக்கவே உபயோகிக்கிறோம்!
இந்த ஆண்டும் மழை
இல்லை என்றால்
பிறந்த ஊரில் பிழைக்க வழி இல்லை.!
அகவை ஐம்பதை கடந்தவன்
அயல் நாட்டிலும் அயலூரிலும்
என்ன செய்வான்!
கருணை காட்டு
வருண கடவுளே!!!

No comments:

Post a Comment