பெரிய மூட்டையுடன் விலையுயர்ந்த
பொருளை கொண்டுவரும்
தனியார் நிறுவன ஊழியரை விட
ஒரு கட்டு கடிதங்களுடன் சைக்கிளில் வரும்
தபால்காரர் அழகு!!!
பொங்கல் முடித்த பின்
வந்தாலும் அஞ்சலில் வந்த பொங்கல்
வாழ்த்து தந்த சந்தோசத்தை
பொங்கல் அன்றே அலைபேசியில்
பகிர படும் ஒளிர்படங்கள்
தருவதில்லை!!!
சிவப்பு வண்ணத்தில் விதவிதமான
அளவுகளில் இருக்கும் அஞ்சல்
பெட்டிகள் அஃறிணை இல்லை.
அருகி வரும் உயிரினம்.
எத்தனை மனங்களில் எண்ணங்களை,
ஏக்கங்களை, தவிப்புகளை,
ஆறுதல்களை அவை சுமந்திருக்கும்.
கடிதங்களில் இருந்த அன்பு
அரவணைப்பு இப்போது இல்லை!!!
பொருளை கொண்டுவரும்
தனியார் நிறுவன ஊழியரை விட
ஒரு கட்டு கடிதங்களுடன் சைக்கிளில் வரும்
தபால்காரர் அழகு!!!
பொங்கல் முடித்த பின்
வந்தாலும் அஞ்சலில் வந்த பொங்கல்
வாழ்த்து தந்த சந்தோசத்தை
பொங்கல் அன்றே அலைபேசியில்
பகிர படும் ஒளிர்படங்கள்
தருவதில்லை!!!
சிவப்பு வண்ணத்தில் விதவிதமான
அளவுகளில் இருக்கும் அஞ்சல்
பெட்டிகள் அஃறிணை இல்லை.
அருகி வரும் உயிரினம்.
எத்தனை மனங்களில் எண்ணங்களை,
ஏக்கங்களை, தவிப்புகளை,
ஆறுதல்களை அவை சுமந்திருக்கும்.
கடிதங்களில் இருந்த அன்பு
அரவணைப்பு இப்போது இல்லை!!!
எங்கள் பழனியின் கவிதையும் அழகே....
ReplyDelete