அடைமழை கால
தேநீர் நீ!
சுடும் வெயில்கால
இளநீர் நீ!
என் முன்னிரவின்
மெல்லிசை நீ!
என் பின்னிரவின்
கனவுகள் நீ!
என் தோட்டத்தில்
மல்லிகை நீ!
என் வானத்தின்
வானவில் நீ!
என் பயணத்தின்
ஜன்னல் இருக்கை நீ!
என் கவிதைகளின்
பிறப்பிடம் நீ!
என் காதலின்
உறைவிடம் நீ!
என் வாழ்வின்
வசந்தம் நீ!
என்னவள் நீ!
என் வீட்டின்
மருமகளாய் நீ?
No comments:
Post a Comment