Thursday, 21 June 2012

காதல் கசிகிறது

நுரை முட்டும் கடல்
அலைகளை பார்த்துகொண்டிருந்த 
தருணத்தில் நீ கேட்டாய்
என்னை எவ்வளவு பிடிக்கும் என்று !

நான் கைகளை விரித்து 
இவ்வளவு என்று சொல்ல 
வந்து நிறுத்தி கொண்டேன் !

கடலை கை நீட்டி 
கடலளவு என்று சொல்ல  
வந்து நிறுத்தி கொண்டேன் !

வானத்தை காட்டி
வானளவு என்று சொல்ல
வந்து நிறுத்தி கொண்டேன் !

‘பிடிக்கும்’ எவ்வளவு என்று
சொல்ல தெரியல என்றேன் !

நீ கண்ணீருடன் என்னை
கட்டி அணைத்தாய் !

உன் கண்ணீரில்
என் காதல் கசிகிறது !

2 comments: