Thursday, 10 May 2012

அவளின் பாசம்


அ னாவிலும் “A” யிலும்  என்  கையை
பிடித்து  இயக்கியவள் .
இப்போது  நான் எழுதும்  “A” வில்  
எத்தனையோ  மாற்றங்கள்
அவள்  அன்பு  அப்படியே  உள்ளது !

எத்தனை முறை  அடித்தாலும்
மீண்டும்  அவளுடன்
ஒட்டவைக்கும்  காந்த சக்தி
அவளின்  பாசம் !

நாகர்கோயில்  கல்லூரியில்  சீட்
எனக்கு  கிடைத்தது
பாளையம்கோட்டை  காலேஜ்  நல்ல
காலேஜ்  இல்லையா  என்று  கேட்டபோது
அவளின்  தவிப்பு  தெரிந்தது !


வேலை  கிடைத்து  சென்னை
கிளம்பும்  முன்  காலில் 
விழுந்து  ஆசி  பெரும்  போதே
அழுதுவிட்டாள்!

இன்றும்  என்  பயணங்களில்
நினைவுகளாய் உடன்  வருகிறது
அவளின்  அரவணைப்பு !

அவளின்  பாசத்தை  பெற  கடவுள்  (கம்பெனி )
எனக்கு  தந்த  கால அட்டவணை
மூன்று  மாதங்களுக்கு ஒருமுறை
மூன்று  நாட்கள் !

அவளே  தேய்த்துவிடும்  எண்ணெய்
குளியலுக்காக  ஒரு  தீபாவளி,
சீயக்காய்  வாசத்தில் அவளின்  பாசம்
இருக்கும் !

வீடு  முழுக்க  நிறைத்திருக்கும்
சுண்ணாம்பு  கோலங்களை
ரசிப்பதற்காக  ஒரு  பொங்கல் !

லேசா  பறக்குது  மனசு  என்று  
திரிந்தாலும்  கொடை முடிந்து
அவள்  அருகில்  தூங்கும்  மதியம் !

சென்னை  வெயிலை  விரட்டி  விட்டு
நெல்லை  வெயிலை  ரசிக்கும்
மே  மாத நாட்கள் !

என்னவளை  தேடும்  பணியை
அவளிடம்  விட்டு  விட்டேன்
அதிலும்  அவள்  அன்பு
நிறைந்திருக்கும் !



No comments:

Post a Comment