சம்பவம் 1
நந்தனம் பஸ் ஸ்டாப் அருகில் நின்று ஒருத்தர் என்கிட்ட எக்மோர்க்கு பஸ்
வருமானு கேட்டார்.
நானும் ஆர்வ மிகுதில வரும் 23C ல போங்கனு சொன்னேன். அப்படியே பஸ்க்கு ஒரு 4 ருபாய் கொடுங்கன்னு கேட்டார்
சம்பவம் 2
நந்தனம் பஸ் ஸ்டாப் அருகில்
ஒரு பாட்டி, அண்ணா ஒரு 5 ருபாய் இருந்தா குடு என்று டிமான்ட் பண்ணி கேட்கிறது. அந்த பாட்டி பிச்சை கேட்டது கூட ok. ஆனா அண்ணா னு சொல்றது எவ்வளவு பெரிய கொடுமை
சம்பவம் 3
சைதாபேட்டை பஸ் ஸ்டாப் (போலீஸ் ஸ்டேஷன்
), ஒரு பிச்சைக்காரன் பிச்சை கேட்டான், நானும் என் நண்பனும் கையில் இருத்தசில்லறை எல்லாத்தையும் கொடுத்து விட்டோம்,
அவன் 5 ருபாய் 50 பைசா தான் இருக்கு டீ 6
ரூபா.
6 ரூபா இல்ல என்று எங்கள் இருவரிடமும் திரும்ப திரும்ப
கேட்கிறான் .
சம்பவம் 4
கோடம்பாக்கம் ரயில் நிலையம், தினமும் ஒரு பெரிசு ட்ரெயின் விட்டு
இறங்கும் போது யாரிடமாவது ஒரு
5 ருபாய் அடித்து {பிச்சை} சென்று விடுகிறது .
எடுக்கிறது பிச்சைனாலும் இவங்க பன்ற ரவுசு தாங்க முடியல
.
ட்ரெயினில் எத்தனையோ மாற்று திறனாளிகள் எதையாவது வியாபாரம் செய்துபிழைகிறார்கள்.ஆனால் திருநங்கைகள் கறாரா காசு கேட்கிறாங்க
.
இவர்கள் எல்லாருமே அடித்தட்டு மக்கள் இவர்கள் எப்படி ஹைடெக் பிச்சைகாரர்கள் ஆக முடியும்
?
சென்னைன் டாப் 10 ஹைடெக் பிச்சைகாரர்கள் லிஸ்ட்
நம்பர் 10
கோயம்பேடு தனியார் பேருந்து நிலையம் மற்றும் அரசு பேருந்து நிலையங்களில்தரமற்ற உணவையும் தண்ணீர் பாட்டில்களையும் விற்கும் ஹோட்டல்
நிர்வாகத்தினர். [பசியாற்றுவதை விட பணம் பறிப்பதே இவர்கள் குறி /
வெறி ]
நம்பர் 9
அரசு அலுவலகங்களில் எதாவது வேலை நடக்க வேண்டும் என்றால் எனக்கு டீ வாங்கி
சிகரட் வாங்கி தா என்று உயிரை வாங்கும் அரசு அலுவலக சிப்பந்திகள்.
[அரசு பள்ளியில் முன்னாள் மாணவர் TC வாங்க கூட இவர்களுக்கு காசு
கொடுக்க வேண்டி உள்ளது
]
நம்பர் 8
சென்னையில் வீடு தேடுவோரிடம்,24 மணி நேரம் தண்ணீர் வரும், கதவை
திறந்தால் காற்று வரும் (திருடனும் கூடவே வருவான்), இருண்ட வீட்டில் லைட் போட்டால் வெளிச்சம் பயங்கரமா வரும் (கரண்ட் பில் அவங்க அப்பனா
கட்டுவான்)என்று பொய் புளுகி, ஒரு மாத வாடகையை கமிஷன் ஆக பெற்று கொள்ளும் ப்ரோகர்கள்
நம்பர் 7
பண்டிகை காலங்களில் போதுமான வசதி இல்லாத பேருந்துகளுக்கு கூட
1000 ருபாய் 1500
ருபாய் வசூல் செய்யும் தனியார்
பேருந்து நிர்வாகத்தினர் மற்றும் மூட்டை பூச்சியை கூட ஒழிக்க முடியாத அரசு
பேருந்து நிர்வாகத்தினர்.
நம்பர் 6
தாங்கள் மட்டும் வேலை செய்வதாக நினைத்து கொண்டு இந்த டேபிளில்
இருக்கும் பைலை அடுத்த டேபிள் ளுக்கு நகர்த்த கூட
காசு கேட்டும் அரசு உழியர்கள் [ சனிக்கிழமைகளில் ரொம்ப மோசம்
பண்றாங்க
]
நம்பர் 5
நான் நடிச்ச படம் ரொம்ப நல்லா இருக்கு தியேட்டர்ல போய் பார் என்று
TV ல் சேர் போட்டு உட்கார்ந்து மொக்க போடும் சினிமாகாரர்கள்
[படம்
நல்லா இருக்குனு நாங்க (ரசிகர்கள்) சொல்லணும்டா நாயே
]
நம்பர் 4
இளம் தலைமுறையினரின் சான்றிதழ்களை வாங்கி வைத்து கொண்டு,
கம்பெனி விட்டு செல்வதென்றால் பணம் கொடு (லட்சங்களில்
) என்று மிரட்டி இளம் தலைமுறையினரின் உழைப்பை /
அறிவை* உறிஞ்சும் தொழில் அதிபர்கள் (*conditions
apply)
நம்பர் 3
சாதாரண காய்ச்சலுக்கு கூட
இந்த டெஸ்ட் எடு அந்த டெஸ்ட்
என்று பணத்துக்கு மாரடிக்கும் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் அதற்கு
துணை போகும் மருத்துவர்கள்.
நம்பர்
2
வாக்குறுதிகளை வசனங்களாக படித்து ஒப்பித்து விட்டு ஓட்டுக்கு 1000
கொடுத்து விட்டு கோடிகளில் கொள்ளை அடிக்கும் அரசியல்வாதிகள்.
நம்பர்
1
இன்ஜினியரிங் சீட்க்கு 10, மெடிக்கல் சீட்க்கு
40 என்று கல்வியை கூட காசாக்கும் கல்வி தந்தைகள்(?!).
இன்னும் பல ஹைடெக் பார்ட்டிகள் இருக்கிறார்கள் கோவிலில் சாமி தரிசனத்துக்கு காசு
… etc,
மேற் குறிப்பிட்டவர்களில் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள், இன்னும் பலர்
சூழ்நிலை காரணமாக தவறு செய்கிறார்கள்
.
No comments:
Post a Comment