Wednesday, 21 March 2012

உன்னோடு நானிருக்கும் ஒவ்வொரு நொடியும்


எவளோ  ஒருத்தியாய் தான்
இருந்தாய்
என்  முதல்  பார்வையில்
இன்று  என்னவளாய்
உருமாறி விட்டாய் !

காதலே  வேண்டாம்
என்று  தான்  இருந்தேன்
இன்று  காதலை  காதலிக்கிறேன்
காதலாய்  நீ !

நகர  வாழ்க்கையை
வெறுத்த  நான்
இன்று  ரசிக்கிறேன்
உன்னை  பார்க்கும்  தருணங்களில் !

பேருந்து  பயணம்
பிடித்ததில்லை  எனக்கு
இன்று  விரும்புகிறேன்
உன்னோடு  பயணிக்கும்
ஒரு  சில  நிமிடங்களுக்காக !

கனவுகளை  கண்டு
பயப்பட்ட  நான்
இன்று  கனவுகளிலே
வாழ்கிறேன்
கவிதையாய் நீ
வருவதால் !

வாழ்வை வணங்க
போகிறேன்
நாளை  வண்ணமாய்
நீ  வந்தால்
வருவாயா?

No comments:

Post a Comment