Wednesday, 21 March 2012

இல்லை என்ற சொல்லை தங்குவதென்றால்

தயக்கத்தால்  தான்  
தவறவிட்டேனா உன்னை
சிந்திக்கிறேன் !

இறக்கைகளை  களைந்த
மொட்டை  காத்தாடியாய்
இருக்கிறேன்  நான்
சுற்றி  சுழலவிட்டவள்
நீதானே!

நீ  என்னை  தவிர்த்து
விட்டாயா
நான்  உன்னை  தவற
விட்டேனா
தெரியவில்லை  எனக்கு!

உன்னிடம்  பேசிவிட்டேன் ,
என்  காதலை
சொல்லிவிட்டேன்
ஆனாலும்  மகிழ்ச்சி
இல்லை !

உன்  ஒற்றை சொல்லில்தான்
எத்தனை  வலி !

சிறகுகளை  வெட்டி  எறிந்தபின்
வண்ணத்து  பூச்சிக்கு
வண்ணம்  எங்கிருந்து  வரும் !

என்  நெற்றியின்  
வியர்வையை  காற்று
துடைத்து  செல்கிறது
என்  மனதின்
காயத்தை  யார்
துடைக்க ?

No comments:

Post a Comment