அகரத்தில் தான் ஆரம்பித்தேன்
என் அன்னை மொழியை !
பள்ளியில் வள்ளுவன் வாய்மொழி
கேட்டு வளர்ந்தேன் !
குற்றியலிகரம் , குற்றியலுகரம்
பகுபத உறுப்பிலக்கணம் கற்றேன் !
ஆங்கில சொல் ஆளுமை
தெரியாமல் அலுவலகத்தில்
அசிங்கப்பட்ட போது நான்
கவலை கொள்ளவில்லை !
உலக அரங்கில் என்
உடன்பிறப்பு எல்லா புகழும்
இறைவனுக்கே என்ற போது
உவகை கொண்டேன்!
அறிவியல் மேதை அப்துல் கலாம்
முதல் குடிமகனான போது
பெருமை தலைக்கேறிவிட்டது !
என் இன மக்களை
சிங்களவன் கொன்று குவித்த போது
ரத்த நாளங்கள் கொதிப்படைந்தன !
நவீன இசை என்று ஆத்திசுடியை
பிய்த்து எறிந்த போது
முதலில் ரசித்தாலும் பின்னர்
கடுப்பாகி விட்டேன் !
இன்று
நான் வரைந்த ஓவியம்
“டாடி” என்று அழைக்கும் போது
சினம் கொள்ளமுடியாமல்
சிதைந்து போகிறேன் !
No comments:
Post a Comment