Thursday, 1 March 2012

சந்தோசம்


ஊரில்  இருந்து  சென்னைக்கு
கிளம்புகிறேன்
பேருந்து  நகரை  தாண்டிவிட்டது
தூக்கம் வருகிறது !

அசந்து  தூங்கவில்லை
கையை  மடித்து  முகமருகே  
முட்டு  கொடுக்கிறேன்
தீபாவளிக்காக  கையில்  வைத்த
மருதாணியில்  அம்மாவின்  வாசம்!

சாப்பிட  எழுந்தேன்
பார்சலில்  தொட்டு  கொள்ள
இருக்கும்  றுகாயில்
அக்காவின்  பாசம் !

மீண்டும்   தூங்க  முயல்கிறேன்  
குளிர்கிறது  போர்த்திகொள்கிறேன்
சால்வையில் அப்பாவின்  அரவணைப்பு !

அலைபேசி  குறுந்தகவலில்
அண்ணனின்  நட்பு !

அதிகாலையில்  தேநீர்
பருகுகிறேன்
தாத்தாவின்  நினைப்பு !
சொந்த  ஊரில்  சின்ன  சின்ன
விஷயங்களும்  சந்தோசம்  தான்

ஆனால், 
சென்னையில்
கண்டக்டர்  அருகில்  நிற்கும்
என்னிடம்  டிக்கெட்  எடுக்க
சொல்லும்  அழகான  பெண்ணின்
Excuse me மற்றும்  தேங்க்ஸ்  தான்
ஒரே  சந்தோசம் !

No comments:

Post a Comment