Wednesday, 8 February 2012

I miss u

இரண்டாம் வகுப்பில்
நான் கேட்ட சிவப்பு
சட்டை பண்ணிரட்டாம்
வகுப்பில் கிடைத்த போது
சந்தோசப்பட்டேன் !

பள்ளியில் நான் தொலைத்த
நண்பர்கள் பட்டாளத்தை
கல்லூரியில் பெற்ற போது
மகிழ்ச்சி அடைந்தேன் !

வேலை இல்லா
நாட்களில் என்னை
தேடிய பொழுதில்
வேலை கிடைத்த போது
வெகுமதி அடைந்தேன் !

குடும்பத்தை பிரிந்து
சென்னையில் இருக்கும்
நான், கையில் வைத்த
மருதாணியில்
அம்மாவின் வாசத்தை
நுகர்வேன்!

தலையணை எனக்கு
தருவதில்லை தாய்மடி
சுகத்தை !

சொந்தமாய் இருந்தும்
என்னால் அனுபவிக்க
முடியவில்லை
வாய் காலையும், வயற்காட்டையும் !

எதற்காகவோ
எதையெதையோ
இழந்திக்கிறேன்

எனதுயிரே
எதற்காகவும்  உன்னை
என்னால்
இழக்க முடியாது !

No comments:

Post a Comment