Wednesday, 8 February 2012

Thevathai

எப்படி தொலைத்தேன்
என்னை
அப்படியே பின்னோக்கி
பார்க்கிறேன் !

கவனமாய் பயணித்த
நான் எங்கே
வழுக்கினேன்
அவள் கால் கொலுசிலா?

எண்ணங்கள் நிறைந்த
என் வாழ்வில்
வண்ணங்கள் வந்தது
எப்போது ?

அவள் காது மடலில்
கவிதை பாடும்
"ஜிம்மிகி" இடம்  நான்
என்னை இழந்தேனா?

அசுர கதியில் இருந்த
நகர வாழ்க்கையில்
தென்றல் வந்தது
என் தெருவிலா?

மனசு மரத்து போன
என்னிடம்
மயிலிறகால் வருடி
எழுத்தை பிடுங்கி
கொள்பவள்
என் இதய தேவதையா?

No comments:

Post a Comment