Wednesday, 8 February 2012

My proposal

அடைமழை பெய்து
வெறித்தது போல உள்ளது
இன்னும் வீட்டின் முகப்பில்
இருந்து சொட்டி கொண்டுஇருக்கிறது
மழைத்துளி!

காற்றில் மாட்டி கொண்ட
ஜன்னல் கதவாய்
சம்பவம் என் முன்னே
நிழலாடுகிறது!

தேவதை நடக்கும்
தெருவே என்னை
கிண்டல் செய்கிறது
காதலை சொல்ல
தெரியாதவன் என்று!

கடந்த சில வாரங்களாக
சந்தோசமாய் இருந்தேன்
துக்கத்தையும் தூக்கத்தையும்
சேர்த்து தந்து விட்டாய்
அயர்ந்து தூங்கிவிட்டேன்
அசராமல் உன் நினைவுகள்!

தொடர்கிறது
உனக்கான கவிதைகள்
மிச்சமிருக்கிறது
என்னிடம் காதல்!

எழுத்தின் மீது
நம்பிக்கை வைத்தவன்
என்னவளின் மனதை
அறிய மறந்துவிட்டேன்!

No comments:

Post a Comment