Wednesday, 25 October 2023

பாகிஸ்தான் சறுக்கியது எதனால்

உலகக் கோப்பையை நன்றாக துவக்கிய பாகிஸ்தான் அணி மூன்று தொடர் தோல்விகளால் தத்தளிக்கிறது. காரணம் என்ன ?



துவக்கம் :

நெதர்லாந்து அணியுடான போட்டியில் மோசமாக தான் ஆடியது டாப் ஆர்டர், அதற்கு பின்பும் அது சரி செய்யப்படவில்லை. ஸமானுக்கு பதிலாக அப்துல்லா ஷபீக் களம் இறக்கப்பட்டார். ஆனால் பாகிஸ்தான் அணியில் அடித்து ஆட கூடிய துவக்க ஆட்டக்காரர் இல்லை. ஆசியக் கோப்பையில் இப்திகாரை துவக்க ஆட்டக்காரராக இறக்கி முயற்சித்து பார்த்திருக்கலாம். அணியின் ஒரே அதிரடி ஆட்டக்காரர் அவர் தான். 
ரிஸ்வானை துவக்க ஆட்டக்காரராக களம் இறக்கலாம், ஆனால் பேக்அப் விக்கெட் கீப்பர் யாரும் 15 பேர் அணியில் இல்லை. பங்களாதேஷ் மிராஸை பரீட்ச்சித்தது போல சதாப்க்கு முழு சுதந்திரம் கொடுத்து டாப் ஆர்டரில் முயற்சித்து இருக்கலாம்.

வேகப்பந்து:

மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் என்று மார்தட்டிக் கொண்டு இருந்தார்கள். நசீம் ஷா காயத்தினால் விலக, அவரை போன்று வேகம் வீசக் கூடிய ஸமான் கான் அணியில் இடம் பெறவில்லை. மாறாக மித வேகப் பந்து வீச்சாளர் ஹசன் அலி இடம் பெற்றார். அவர் தான் தற்போது நன்றாக பந்து வீசுகிறார்.
ஷாகீன் அப்ரிடி ஏதோ பந்து வீசுகிறார். சுத்தமாக டெக்னிக் இல்லை. அப்ரிடி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 விக்கெட் என்றார்கள், அது ஆஸ்திரேலியர்களே தானாக அவுட்டாகி சென்றது குறிப்பிடத்தக்கது.(ஒரு லெக் பிபோர், மற்றவை கேட்ச்கள்). ஹரிஸ் ரப் வேகமாக பந்து வீசுகிறார் அவ்வளவு தான். ஒரு ஸ்பின்னரை குறைத்து விட்டு முகமது வாசிம்மை களம் இறக்கலாம்.


சுழற்பந்து: 

சுழற்பந்தை பொறுத்தவரை பாகிஸ்தானில் எப்போதும் ஒரு தரமான பவுலர் மற்றும் இரண்டு பகுதி நேர பவுலர்கள் இருப்பார்கள். தற்போதைய அணியில் உருப்படியான சுழற்பந்து வீச்சாளர் இல்லை என்றே சொல்லலாம். இந்தியாவே லெக் ஸ்பின்னர்களை தேர்வு செய்யவில்லை, ஆனால் பாக் அணி ரெண்டு லெக் ஸ்பின்னர்களுடன் வந்துள்ளது. இப்திகார் மட்டும் சூழலை சமாளிக்கிறார். சதாப்கான் மற்றும் நவாஸ் சூழலுக்கு தகுந்தவாறு பந்து வீசவில்லை.

பாபர்:

பாபர் ஒரு பேட்ஸ்மேனாக நெதர்லாந்து போட்டியில் திணறினார். பிறகு வந்த போட்டிகளில் 100 அல்லது அதற்கு குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடினார். இதுவே அணியின் தன்னம்பிக்கையை குலைத்து விடும். தற்போதைய கிரிக்கெட்டில் 11-40 ஓவர் அடித்து ஆடலாம் என்ற நிலையில் உள்ளது. பேட்ஸ்மேனாக பாபர் அணுகுமுறை தவறு.
கேப்டனாக செயல்பாடு, கடிவாளம் போட்ட குதிரை போல செயல்படுகிறார். ஹரிஸ் ரப்பை புது பந்தில் பந்து வீச அழைப்பதில்லை ஏனோ?
அடிக்கடி பீல்டிங்கின் போது வெளியே செல்கிறார். அவரே களத்தில் நிற்கும் போது பந்து வீச்சாளர்களிடம் பேசுவது போல் தெரியவில்லை. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஸ்கோயர் லெக்கில் பீல்டிங் செய்தார். அணியின் ஒவ்வொருவரின் பணி என்ன என்பது பற்றிய புரிதல் இருப்பது போல் தெரியவில்லை.

ரிஸ்வான்:

அணியில் உருப்படியாக பேட்டிங் ஆடுவது ரிஸ்வானும் ஒருவர். இலங்கைக்கு எதிரான போட்டியில் அந்த ஓவர் ஆக்டிங்கை குறைத்திருக்கலாம். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கூட லெக் சைடில் போகும் பந்துக்கு ரிவ்யூ கேட்ட சொன்னது தவறான செயல். தனது கடமை என்ன என்பதை பற்றிய புரிதல் இல்லை என்றே தோன்றியது. 



ஷகீல்:

அனுபவமில்லாத வீரர் என்றாலும் தனது பணியை உணர்ந்து விளையாடும் ஒரே பாகிஸ்தான் வீரர் இவர் தான். 

ஆர்தரின் பணி என்ன? தோல்விக்கான காரணத்தை ஆராயாமல் பாட்டு போடாததால் தோற்றது என்ற ஆராய்ச்சி எதற்காக.

இந்தியாவில் அதிகம் விளையாடிய அனுபவமிக்க வாசிம் அக்ரம், வக்கார் போன்றோரை மெண்டராக நியமித்து இருக்கலாம். வாக்கார் கவலையோடு டிவி ஷோவில் சொல்கிறார் இந்த தோல்வி டிரஸ்ஸிங் ரூம்மில் எதுவும் கலவரத்தை ஏற்படுத்திவிட கூடாது என்று.

பாகிஸ்தான் தனது பந்துவீச்சு, பேட்டிங் மற்றும் பீல்டிங் என மொத்த குறைகளையும் மாற்றினால் மட்டுமே அரை இறுதி வாய்ப்பு.

No comments:

Post a Comment