Thursday, 19 October 2023

ராகுலின் மீட்சி

கண்ணனூர் லோகேஷ் ராகுல், சர்வதேச கிரிக்கெட் ஆட துவங்கியதில் இருந்து அணியில் இடம் பிடிப்பது காயம் காரணமாக வெளியேறுவது என்பது வாடிக்கையாகிவிட்டது. தற்போதைய அவரது ஆட்டம் மூன்றாம் நாளில் உயிர்தெழுதல் போன்ற சிறப்பான நிகழ்வு. அதனால் தான் தலைப்பு ராகுலின் மீட்சி.

டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான பின்பு 2016ல் ஜிம்பாப்வே சென்ற இரண்டாம் கட்ட அணியில் தோனியோடு சென்றவர். முதல் ஒருநாள் போட்டியில் சிக்ஸ் அடித்து சதம் போட்டாலும் அடுத்த வாய்ப்புக்கு காத்திருக்க வேண்டி இருந்தது.



ஒருநாள் போட்டிகள் அதிகம் விளையாடாவிட்டாலும் 2019 உலகக் கோப்பை அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். 2019 உலகக் கோப்பையில் 4 வது வீரராக யார் களமிறங்க என்ற குளறுபடி நிலவியது. ராகுல் தான் முதல் போட்டியில் நாலாவது இறங்கினார். தவான் காயம் காரணமாக வெளியேற துவக்க வீரர் ஆனார். 2 அரைசதமும் ஒரு சதமும் அடித்தார்.

துணைக் கேப்டனாகி, கேப்டனாகி(பகுதி நேர) ஜொலித்து கொண்டிருக்கையில் மீண்டும் காயம். 2023 உலகக் கோப்பையில் இடம் பெறுவாரா என்று சந்தேகம் நிலவியது.

ஆசியக் கோப்பையில் இடம் பெற்றாலும் முதல் இரு போட்டியில் ஆடவில்லை. சக கன்னடரான ராகுல் டிராவிட்டின் சகாயம் காரணமாக இருக்கலாம்.  உலகக் கோப்பை அணிக்கு நாலாவது வீரர் தட்டுப்பாடு என்ற நிலை. பகுதி நேர விக்கெட் கீப்பரான ராகுலுக்கு நிலையான இடத்த தர முழு நேர விக்கெட் கீப்பர் என்று மாற வேண்டிய கட்டாயம். அவர் கேப்டனாக இருந்த போட்டிகளில் கூட சாம்சனை கீப்பராக ஆக்கியவர் ராகுல். ஐபிஎல்லிலும் வேறு கீப்பர்களை பயன்படுத்தியுள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர் நாலாவது வீரராக களம் இறங்கி சதமடித்து பேட்டை உயர்த்திய போது அருள் வந்து ஆடிய சாமி போல இருந்தது. நேர்த்தியான ஆட்டம்.

அடுத்த போட்டியில் விக்கெட் கீப்பர் ஆனார். ஆஸ்திரேலிய தொடரில் மீண்டும் கேப்டன். ராகுல் டிராவிட் அரசியல் இருந்தாலும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டார். பிரதீஸ் கிருஷ்ணாவுக்கும் வாய்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

உலகக் கோப்பை முதல் போட்டியில் மும்பை வீரரான ஸ்ரேயாஸ்க்கு நாலாவது இடம் தரப்பட்டது அரசியல் என்றாலும் 5 வது இடத்தில் இறங்கி சதமடிக்காவிட்டாலும் 97*, சேசிங்ல் சிறப்பானது.

பாகிஸ்தான் எதிரான போட்டியில் ஸ்ரேயாஸ் அரை சதமடிக்க உதவியது. நேற்றைய போட்டியில் கோலி சதமடிக்க உதவியது என ராகுல் வேற லெவலில் பயணிக்கிறார். விக்கெட் கீப்பிங்கும் சிறப்பாக உள்ளது.

இந்திய அணியின் தலையாய பிரச்சினை நாக்அவுட் போட்டிகளில் தன்னம்பிக்கை இழப்பது. இந்த முறை ராகுல் நாக்அவுட் போட்டிகளில் தன்னம்பிக்கையோடு ஆடினால் மூன்றாம் உலகக் கோப்பை இந்தியாவுக்கு கிடைக்கும்.


No comments:

Post a Comment