டுவிட்டர் அறிமுகத்துக்கு பிறகு நான், எழுத்தாளர் நர்சிம்மின் எழுத்துக்கு அடிமையாகி விட்டேன். அவர் எழுத்துக்களின் வனப்பு அப்படி.
மதுரை கதைகளில் பிடிகயிறையும், லாடம் கட்டுதலையும் விவரித்தவர், சூடு கதையில், சூடடித்தல் பற்றி விவரித்துள்ளார். சூடடித்தல் என்றதும் முதலில் ஞாபகம் வந்தது சூடடித்து குளித்து, குடித்துவிட்டு வரும் சேது மாமா தான்.
மீட்சி கதையில் வரும் குரங்கு கூட்டமும், அச்சு கதையில் வரும் வட இந்திய கூட்டமும் நர்சிம் ஸ்பெஷல்.
அத்தை, அப்பா, அம்மா, தாத்தா, மகன், மகள் என குடும்ப உறவுகளை பின்பற்றியே கதைகள். புத்தகத்தில் வைத்திருக்கும் புது ரூபாய் நோட்டுகளாக காதல்.
கதையில் துவக்கத்தில் ஒரு முடிச்சிட்டு கடைசியில் அவிழ்த்து விடுகிறார். நெல்லிக்காய் சாப்பிட்டு முடித்தபின் வாய்க்குள் வரும் இனிப்பு போல இருக்கிறது.
கல் கதையின் முடிவில் வாசகர் வசம் ஒப்படைக்கிறார். நீங்கள் உங்கள் புரிதலை புகுத்தி கொள்ளுங்கள் என.
யதார்த்தம், மதுரை, மண்மணம் நர்சிம்மின் சிறப்புகள். இன்றைய தலைமுறையும் விருப்பத்தோடு வாசிக்க ஏதுவான கதைகளின் தொகுப்பு "சூடு".
No comments:
Post a Comment