முதல் ஆலமரம்
கீழக்குளத்தின்
கிழக்குக் கரையில்,
எங்கள் பகுதியின் அடையாளம்,
ஆலமரத்தை வைத்து
புதியவர்களுக்கு முகவரி
சொன்னோம் !
முதல் முறையாக பேருந்து
வந்து திரும்பியதும்
ஆலமரத்தின் அருகில் தான் !
வெட்டி வீழ்த்தப்பட்ட
பெரிய சாம்ராஜ்யம் அது !
இரண்டாம் ஆலமரம்
மேலக்குளத்தின் கரையில்
மாலையில் அடையும்
பறவைகளின் சத்தம்
அடங்க நேரம் எடுக்கும்.
பறவைகளின் எச்சமும்
நசுங்கிய ஆலம்பழங்களாய்
இருக்கும் குளத்துப் பாதை !
வயதாகிய மரம்
பெருமழையின் காற்றில்
மரணித்து விட்டது !!
மூன்றாம் ஆலமரம்
கீழக்குளமும் ஓடையும்
சந்திக்கும் இடத்தில்
விழுது பரப்பி இருக்கிறது !
எங்கள் தோட்டத்திற்கு
செல்லும் வழியில் இன்றும்
இருக்கிறது உயிர்ப்புடன் !
யாரும் இளைப்பாறலாம்
கால்நடைகளே அதிகம்
இளைப்பாறுகிறது
இந்த ஆலமரத்தடியில் !!!
No comments:
Post a Comment