Saturday, 29 July 2023

மூன்று ஆலமரங்கள்

முதல் ஆலமரம் 

கீழக்குளத்தின் 

கிழக்குக் கரையில்,

எங்கள் பகுதியின் அடையாளம்,

ஆலமரத்தை வைத்து

புதியவர்களுக்கு முகவரி

சொன்னோம் !

முதல் முறையாக பேருந்து

வந்து திரும்பியதும்

ஆலமரத்தின் அருகில் தான் !

வெட்டி வீழ்த்தப்பட்ட

பெரிய சாம்ராஜ்யம் அது !

இரண்டாம் ஆலமரம்

மேலக்குளத்தின் கரையில்

மாலையில் அடையும்

பறவைகளின் சத்தம்

அடங்க நேரம் எடுக்கும்.

பறவைகளின் எச்சமும்

நசுங்கிய ஆலம்பழங்களாய்

இருக்கும் குளத்துப் பாதை !

வயதாகிய மரம்

பெருமழையின் காற்றில்

மரணித்து விட்டது !!

மூன்றாம் ஆலமரம்

கீழக்குளமும் ஓடையும்

சந்திக்கும் இடத்தில்

விழுது பரப்பி இருக்கிறது !

எங்கள் தோட்டத்திற்கு

செல்லும் வழியில் இன்றும்

இருக்கிறது உயிர்ப்புடன் !

யாரும் இளைப்பாறலாம்

கால்நடைகளே அதிகம்

இளைப்பாறுகிறது

இந்த ஆலமரத்தடியில் !!!



No comments:

Post a Comment