வாசிப்பது எப்படிக்கு பின் எழுத்தாளர் செல்வேந்திரன் ஆக்கத்தில் நான் வாசித்த இரண்டாவது புத்தகம் பாலை நிலப் பயணம்.
எனக்கு பயணங்கள் மிகவும் பிடித்தவை. ஆனால் ஏனோ பயணங்கள் அமைவதில்லை. பயணங்கள் பற்றிய புத்தக ஆர்வமும் அதிகமாகிவிட்டது.
பாலை நிலப் பயணம் என்றதும் வளைகுடா நாடுகளை வளைய வளைய சுற்றிய அனுபவம் என்றோ, ஆப்பிரிக்க நாடுகளை அணுகிய பயணம் என்றோ நினைக்க வேண்டாம்.
இது நம் நாட்டின் பாலைநில மாநிலங்கள் ராஜஸ்தான் மற்றும் குஜராத்தை சுற்றிய அனுபவங்கள். பயணத்தில் வேறுபட்ட ரசனைகள் கொண்ட மனிதர்கள் அவர்களின் தேடல் என அழகாக விவரிக்கிறார்.
வாசிக்க வாசிக்க நாமே பாலை நிலத்தில் பயணிக்கும் பரவசம் தொற்றிக் கொள்கிறது.
ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் தொடங்கி அகமதாபாத் விமான நிலையத்தில் முடிகிறது இந்த புத்தகம்.
ஓசியான், கிச்சான், ஜெய்சல்மார், பர்மார், பூஜ் என்ற பகுதிகளில் சிலவற்றை, டிராவல் எக்ஸ்பி சேனலில் மட்டுமே பார்த்த எனக்கு எழுத்து மூலம் காட்சிப்படுத்தியது சுவாரஸ்ய அனுபவமாக இருந்தது.
என்பு என்ற சொல்லின் இன்னொரு பொருள், தங்க உப்பளம் என வழி நெடுக காட்டுமல்லி.
கானமயில் தேசிய பறவையாக இருந்திருக்க வேண்டும்.ஆங்கில பெயர் பஸ்டார்ட் உச்சரிப்பால் தகுதி இழந்தது என்பது புது தகவல் தருகிறார்.
" எவளாச்சும் ஒரு செங்கல் நட்டு வச்சாளா" என்று பாட்டு மட்டுமே கேட்டவர்களுக்கு, ராணி கீ வாவ் வரலாறு வியக்க வைக்கும்.
ராஜஸ்தானையும் குஜராத்தையும் சுற்றி பார்க்க தூண்டுகிறது இந்த புத்தகம்.
No comments:
Post a Comment