கமலின் புத்தகப் பரிந்துரையில் தான் இந்த புத்தகம் பற்றி தெரியும். டுவிட்டரில் பலரும் பரிந்துரைத்த புத்தகம்.
புத்தகத்தை புரட்டியதும் எங்க ஊர்காரர் என்ற ஈர்ப்பு வந்தது. பதின் பருவத்தினருக்கு என்று சொல்லி இருந்தாலும் இது, அனைவருக்குமான புத்தகம்.
நான் ஏற்கனவே இறையன்பு ஐஏஎஸ் எழுதிய படிப்பது சுகமே வாசித்திருக்கிறேன். அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது செல்வேந்திரனின் வாசிப்பது எப்படி?
முதல் பகுதியை வாசிக்கும் போது ரொம்ப ஓவராக பேசி இருக்கிறாரோ என்று தோன்றியது. அதில் இருந்த எதார்த்தம் சுட்டது. ஆய்வுக்கும், அனுபவத்துக்கும் இடையிலான புத்தகம் இது.
ஜெயலலிதா, ஷீலா வாழ்வு மூலமாக சொன்ன உதாரணம் அருமை. ஏன் வாசிக்க வேண்டும்? வாசிப்பதில் கிடைக்கும் பலன் என்ன? என வெவ்வேறு தலைப்புகளில் சுவையான எழுத்து மூலம் சொல்லி இருக்கிறார்.
பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பரிசளிக்க சிறப்பான புத்தகம். குறைந்த பக்கங்களில் நிறைவான படைப்பு. எளிதில் கிடைக்கும் புத்தகம்.
கடைசியாக, செல்வேந்திரன் பரிந்துரைக்கு புத்தகங்களின் பட்டியலும் உள்ளது.
அருமை...
ReplyDeleteநன்றி 🙏
Delete