கிரிக்கெட், இந்தியாவை பொறுத்தவரை பலரையும் மயக்கிவிட்ட ஒரு விளையாட்டு.
கிரிக்கெட்டை மேற்கோள் காட்டி கம்பெனி மீட்டிங்களில் பேசப்படுகிறது. மேலாண்மை பாடத்திட்டத்தில் உதாரணமாக சொல்லப்படுகிறது.
கிரிக்கெட்டை நீண்ட காலமாக நேசிக்கும் திரு. ராமசந்திரன் அவர்களின் பேட்டி யூடிபில் வந்துள்ளது. எனது வேண்டுகோளுக்கு இணங்க எனது கேள்விகளுக்கு பதில் சொல்லி உள்ளார்.
திரு. ராம் கிரிக்கெட் ரசிகர், கிரிக்கெட் வீரர், இணைய பண்பலையில் வர்ணனையாளர், எல்லாத்துக்கும் மேல் நண்பர். நான் கேட்டதும் எல்லா கேள்விகளுக்கும் உடனே டைப் செய்து பதில் அளித்துள்ளார். நன்றி.
கேள்வி: கிரிக்கெட் உங்களை ஆட்கொள்ள தொடங்கியது எந்த ஆண்டில் ?
பதில்: 1997-1998 டாக்காவில் 12 பந்துக்கு 11 ரன் ஹிரிஷிகேஷ் கனித்கர் அடிப்பாரே (அடிப்பாரே என்ற சொல்லாடல் தவறு, ஆனால் கிரிக்கெட் ஆட்கொண்ட விதம் அப்படி, அடித்தாரே என்பதே சரியான சொல்லாடல். இது தான் காட்சி என நடித்து காட்டப்பட்ட சினிமாக்களுக்கு அடிப்பாரே அது சரியான சொல், ஆனால் நேரடியாக ஒளிபரப்பில் தொலைகாட்சியில் பார்த்தாலும் அது ஒரு கடந்த கால நிகழ்வு) அப்பொழுது இருந்து கிரிக்கெட் என்னை முழுதாய் ஆட்கொண்டு விட்டது...
1995 ல இருந்தே சாலை, கொல்லை, மைதானம், வகுப்பறை, மொட்டை மாடி என கிரிக்கெட் விளையாட தொடங்கிவிட்டேன்...
கேள்வி: நீங்கள் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்த காலத்தில் டெஸ்ட் உலக கோப்பை சாத்தியம் என நினைத்தீர்களா?
பதில்: இப்பவுமே அது சாத்தியமில்லை தான்.... உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் என்று தானே சொல்கிறார்கள்....
கேள்வி: நீங்க பார்த்ததில் மனதுக்கு நெருக்கமான போட்டி எது? ஏன்?
பதில்: இந்தியா- ஆஸ்திரேலியா ஈடன் கார்டன் டெஸ்ட்....
அந்த மேட்ச் இப்பவும் ஒரு வாழ்க்கை பாடம் மாதிரி எனக்கு ❤️
கேள்வி: நீங்க பார்க்க முடியாமல் போய் தேடி தேடி ஹைலைட்ஸ் பார்த்த போட்டி எது? எதனால் ?
பதில்: 2002 NatWest தொடர் இறுதி போட்டி... Lords இந்தியா - இங்கிலாந்து இடையேயான போட்டி. (கங்குலி சட்டையை கழற்றி சுற்றிய அதே போட்டி)
கேள்வி: இந்திய கிரிக்கெட்டில் எதை இன்னும் மேம்படுத்த வேண்டும்/சரி செய்ய வேண்டும்? (மும்பை லாபி தவிர்த்து)
பதில்: டெஸ்ட் ஆட்டத்துக்கான வீரர்களை அதிகம் உருவாக்க வேண்டும்.... இப்பொழுது இருப்பது போலவே பந்துவீச்சை வலிமையா பார்த்துக்கொண்டு இளம் வீரர்களை உருவாக்க வேண்டும்.... நல்ல சுழற்பந்து வீச்சாளர் தேவை அஸ்வினுக்கு அடுத்து யாரும் தெரியவில்லை.
கேள்வி: உள்ளூர் போட்டிகள் / மகளிர் கிரிக்கெட் போட்டிகள் இவைகளிலும் உங்களுக்கு விருப்பம் உண்டா?
பதில்: இரஞ்சி போட்டிகளை உற்று கவனிப்பேன் நிறைய வியப்புகள் அரங்கேறும்... சையது முஸ்தாக் அலி கோப்பை இது மாதிரி அப்புறம் சமீபத்தில் TNPL கூட பார்க்கிறேன்...
கேள்வி: நவீன கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருப்பது போல உள்ளதா?
ஆமாம் வியாபார நோக்கிற்காக அது போல் மாற்றப்பட்டுள்ளது.
கேள்வி: இந்த டெஸ்ட் உலகக்கோப்பை சரியான முறையில் உள்ளதா? இந்தியா - பாகிஸ்தான் ஒருமுறை கூட மோதவில்லை?
பதில்: கண்டிப்பா சரியா இல்லை.... எதிர்வரும் காலங்களில் அதை சரி செய்யலாம் சமமான வாய்ப்புகளாக அமைக்க வேண்டும்....
கேள்வி: பேன்டசி லீக் விளையாட்டுகள் கிரிக்கெட்டை அழிவு பாதையில் கொண்டு செல்கிறதா?
பதில்: கிரிக்கெட்டை பாதிக்கிறதானு தெரியவில்லை ஆனால் மக்களை பாதிக்கிறது....
கேள்வி: இந்திய உள்ளூர் போட்டிகளின் (ஐபிஎல் தவிர்த்து) தரம் பற்றி
பதில்: இங்கிலாந்துக்கு பிறகு உள்ளூர் போட்டிகளில் இந்திய கட்டமைப்பு தரமாக உள்ளது... குறிப்பாக இளம் வயதில் வீரர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்... இலங்கை உள்ளூர் போட்டிகளில் அது நடக்காததாலே இன்று அணி வலுவற்று போய் உள்ளது..
கேள்வி: வருங்காலத்தில் தலா ஒரு இன்னிங்ஸ் மட்டும் வைத்து டெஸ்ட் போட்டி வர வாய்ப்புள்ளதா? வந்தால் ஆரோக்கியமானதா?
பதில்: வர வாய்ப்பு இல்லை... வந்தால் ஆபத்து தான்......
கேள்வி: வெளிநாட்டு வீரர்களில் உங்களை கவர்ந்த வீரர்?
பதில்: காலிஸ் ஒரு நல்ல ஆல்ரவுண்டர் அடிப்படையில் அவரை பிடிக்கும்.... அதுக்கு பிறகு கிரிக்கெட்டை பகை கோவம் இல்லாமல் இரசிக்க வைத்த மெக்கல்லம், வார்னர் பிடிக்கும்...
கேள்வி: வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிகளில் சிறப்பான அணி எது?
பதில்: ஆப்கானிஸ்தான் நிறைய திறமையான இளம் வீரர்களை உருவாக்கிட்டாங்க. அணியா இணைந்து நல்லா செயல்பட்டால் விரைவில் பெரிய வெற்றி கிடைக்கும்... இதை தாண்டி நேபாள நாட்டின் கிரிக்கெட் ஆர்வம் ஒரு பிரம்மிப்பு.
கேள்வி: கங்குலி, தோனி இந்தியாவின் மிகச்சிறந்த கேப்டன்கள். இதில் யாருடைய அணுகுமுறை சிறப்பானது?
நான் ஒப்பீடை ஒரு போதும் விரும்ப மாட்டேன். இருவரும் அவங்களுக்குனு ஒரு தனிப்பட்ட அணுகுமுறையில் அணியை வழிநடத்தி வெற்றி பெற்றார்கள்.
கேள்வி: ஐபிஎல் ஆரம்பித்த பின் இந்திய அணி 20 ஓவர் உலகக்கோப்பை வெல்லவில்லை. இது பற்றி
பதில்: இதுக்கு ஐபிஎல் காரணமில்லை.... இந்தியா இனி இருபது ஓவர் உலககோப்பை வென்றாலும் அதற்கு ஐபிஎல் காரணமில்லை...
கேள்வி: தற்போதைய இந்திய அணியில் பகுதி நேர பந்து வீச்சாளர்களே இல்லை. இது சோம்பேறித்தனம் தானே
பதில்: Work load ஐ குறைக்கிறாங்க ஆனால் இது சரியான முடிவு இல்லை.... சச்சின் சேவாக் ரெய்னானு பந்துவீச்சுல பெரிய பங்காற்றிய பேட்ஸ்மேன்ஸ் இருந்த அணி இப்ப கண்டிப்பா மிஸ் பண்றாங்க அதை...
கேள்வி: சிறிய மைதானங்கள், ரேங்க் டர்னர், ப்ளாட் பிட்ச் கிரிக்கெட்டை சீரழிக்கிறதா ?
பதில்: இல்லை அது ஒரு சவால் தானே...
அதுலயும் ஒரு அணி வெற்றி பெறத் தானே செய்கிறது... அது இல்லைனா சுவாரஸ்யம் குறைந்துவிடும்.
நன்றி வணக்கம்
No comments:
Post a Comment