Sunday, 19 April 2020

மனசுக்கு பிடிச்ச பாட்டு 3

சில பாடல்கள் கேட்கும் போது ஏதோ ஒரு இடமோ இல்லை முகமோ நினைவில் வரும்.

அந்த வகையில் நண்பன் ரிஸ்வானை நினைவு படுத்தும் பாட்டு.

"மழை நின்ற பின்பும் தூறல் போல" - ராமன் தேடிய சீதை.

பெண்குரல் தனித்து பாடும் பாடல்கள் என் மனதுக்கு எப்போதும் ஆறுதல் தர கூடியவை. அது ரிஸ்வானுக்கு நன்றாய் தெரியும். அதனால் மழை நின்ற... பாடலை எனக்கு அறிமுக படுத்தினான்.
எனக்கும் கேட்டவுடன் பிடித்து விட்டது.

இதில் இன்னொரு விசயம் இந்த பாடலில் சில காட்சிகள் எங்கள் கல்லூரியினுள் படமாக்கப்பட்டவை.

ரிஸ்வான் அறைத்தோழன், அலுவலக தோழன், கிரிக்கெட் தோழன் ...
மழை நின்ற பிறகு தூறல் போல நினைவில் நிற்பவன்.

No comments:

Post a Comment