காதலை சொல்வதுதான்
உலகில் கஷ்டமானது என்பதை
தெரிந்து கொண்ட நாள் அது !
ஒரு சாதாரண நாள்
சம்பவ நாளாகியது!
காதலை சொல்ல முயன்று
காலையிலே கோவிலுக்கு போய்
கடவுளை வேண்டி கொண்டேன்
வேண்டுகோள் விடுத்தேன்
எனக்கு அவள் வேண்டும் என்று !
ஒற்றை ரோஜா வாங்கும் போதே
வாழ்த்து கூறினாள் பூக்காரி
இனியவளுக்காக காத்திருந்தேன்
தூரத்தில் அவள் முகம்
தோன்றியதும் என் முகம்
வியர்க்க ஆரம்பித்தது
அடி வயிற்றிலும் சில பல
மாற்றங்கள் !
தெருவில் மண்டியிட்டேன்
ரோஜாவை நீட்டினேன்
என் காதல் ரோஜாவிடம் ,
அவள் என்னை விலக்கி,
விலகி சென்றாள்
மறுத்து விட்டாள்
என்பது என் மண்டையில்
உரைக்க ,
ரோஜாவை குப்பை தொட்டியில்
எறிந்தேன்
உனக்கு தெரியாது என்
காதலின் ஆழம் என்று
குப்பை தொட்டியை
எட்டி உதைத்துவிட்டு
பெட்டி கடையை அணுகினேன் !
உலகில் கஷ்டமானது என்பதை
தெரிந்து கொண்ட நாள் அது !
ஒரு சாதாரண நாள்
சம்பவ நாளாகியது!
காதலை சொல்ல முயன்று
காலையிலே கோவிலுக்கு போய்
கடவுளை வேண்டி கொண்டேன்
வேண்டுகோள் விடுத்தேன்
எனக்கு அவள் வேண்டும் என்று !
ஒற்றை ரோஜா வாங்கும் போதே
வாழ்த்து கூறினாள் பூக்காரி
இனியவளுக்காக காத்திருந்தேன்
தூரத்தில் அவள் முகம்
தோன்றியதும் என் முகம்
வியர்க்க ஆரம்பித்தது
அடி வயிற்றிலும் சில பல
மாற்றங்கள் !
தெருவில் மண்டியிட்டேன்
ரோஜாவை நீட்டினேன்
என் காதல் ரோஜாவிடம் ,
அவள் என்னை விலக்கி,
விலகி சென்றாள்
மறுத்து விட்டாள்
என்பது என் மண்டையில்
உரைக்க ,
ரோஜாவை குப்பை தொட்டியில்
எறிந்தேன்
உனக்கு தெரியாது என்
காதலின் ஆழம் என்று
குப்பை தொட்டியை
எட்டி உதைத்துவிட்டு
பெட்டி கடையை அணுகினேன் !
சிரித்துகொண்டே சிகரெட்
தந்தான் கடைக்காரன் !
கண்மணி அவள் வந்த
பாதை மலர் தோட்டம்
அவள் சென்ற பாதை
கல்லறை தோட்டம் போல்
தெரிந்தது
என் கண்களுக்கு!
அலுவலகம் சென்ற போது
என்ன மச்சி ஊத்திகிச்சா
என்றது நட்பு
எனக்கு மட்டும் வருத்தம்
தந்த விஷயம்
நிறைய நண்பர்களுக்கு
சந்தோசம் தருகிறது!
சுவர் மேல சோறு எறிஞ்சா
ஆயிரம் காக்கா
விடு மச்சி என்றது நட்பு !
மச்சான் பறந்தது
பதிமூனாவது காக்கா டா !!!
No comments:
Post a Comment