Friday, 3 August 2012

Tamil Cinema

அண்மையில்  ஆனந்த விகடனில்  ஒரு  மாணவ  பத்திரிக்கையாளர்  நடிகர்  
கார்த்தியிடம்  ஒரு  கேள்வி  கேட்டு  இருந்தார்  
பிற  மொழி  படத்தை  தழுவி  படம்  எடுக்கும்  தமிழ்  திரை
உலகம்  திருட்டு  VCD யில்  படம்  பார்ப்பதை  மட்டும்  கண்டிக்கிறதே? இது  தான் கேள்வி.

Copy rights வாங்காமல்   காபி அடிப்பது  தவறு. திருட்டு  VCD யும்  தவறு. பணம்  போட்டு  படம்  எடுக்கிற  தயாரிப்பாளர்  தெருவிலா  போக  முடியும்  என்று  
பதில்  சொல்லி  இருந்தார்.

தயாரிப்பாளர்  தெருவுல  போறதுக்கு  காரணம் ரசிகர்கள்  திருட்டு  VCDல  படம்  பார்கிறது தான் என்பது  எந்த  வகையில்  நியாயம் .
தயாரிப்பாளர்  எவ்வளவு  கஷ்டபட்டாலும்  தனது  சம்பளத்தை  குறைக்காத  
நடிகர்  நடிகைகள்  காரணம்  இல்லையா .?

ஒரு  நடிகரின்  படம்  தோல்வி  அடைந்தால்  அவரின்  சம்பளம்  பாதியாய்  
குறைக்கபடும்  என்று  தயாரிப்பாளர்கள்  முடிவெடுத்தால் எத்தனை பேர் 
 தமிழ்  சினிமாவில்  நீடிப்பார்கள்.

அப்புறம்  இயக்குனர்  ஷங்கர்  இடம்  நீங்க  என்  Xeroxகாபி  மாதிரி  நண்பன்  
படத்த  எடுதீங்கனு  கேட்டதற்கு   அவரின்  பதில்

3 idiots  படத்த  தமிழ்  மக்களுக்கு  காட்ட தான்  Xerox எடுத்தேன். அதாவது  சேவை  மனப்பான்மையில். 

ராஜா,  சேவை  செய்யணும்னு  நீ  நினைச்சா அந்த  படத்த நீயே  தயாரிச்சு  
இருக்கணும். இல்லேன்னா  சம்பளம்  வாங்காமல்   இயக்கி  இருக்கணும். 
ரெண்டுமே  இல்லேன்னா  இது  எப்படி  சேவை  ஆகும்.

இன்னொன்னு, ஒரு  கோடி  நிகழ்ச்சியில்  சினிமா  பிரபலங்கள்  கலந்து  கொண்டு  அந்த  பணத்த trustகு  நன்கொடை  வழங்குவதாய்  நிறைய  பேர்  வந்தார்கள் .
அவர்களிடம்  ஒரு கேள்வி  அதே  trustukku உங்க  சொந்த  சம்பாத்தியதுல  
எவ்வளவு  ரூபா  கொடுத்திருகீங்க?. 
வருமான வரிக்காக எவ்வளவு நன்கொடை  கொடுத்து  எவ்வளவுக்கு  பில்  
வாங்கினீங்க ?  

No comments:

Post a Comment