மனசு முழுக்க உள்ள
காதலை கண்களில்
கசியவிட்டு காத்திருக்கிறேன்
நீ கண்டு கொள்ளவே இல்லை !
நான் அமைதியாய்
உன்னை பார்த்தாலும்
என் மௌனத்தின்
மொழியை நீ அறியவே இல்லை!
என் சுவாசத்தில்
நீ நிறைந்திருக்கிறாய்
என் மூச்சு காற்றின் முனகலை
நீ கேட்கவே இல்லை !
என் கவிதைகளுக்கு
சிறகுகள் முளைக்கவில்லை
உன்னை சென்றடைய
வாய்ப்பே இல்லை !
நீ மறுத்துவிடாமல் இருந்தால்
மண்டியிட்டு சொல்வேன்
என் காதலை
ஒற்றை ரோஜாவுடன்!
No comments:
Post a Comment