Wednesday, 8 February 2012

Kathal

காதலுக்காக அலைந்த
கல்லூரி பருவம் போய்
வேலை தேடும் படலம் முடிந்து
பணியாற்றி  கொண்டுஇருக்கும் போது
என் பார்வையில் பட்டுவிட்டாய்!
பட்டென்று வரவில்லை
என் காதல்
பல முறை பார்த்த பின் தான் வந்தது!
எட்டரை மணியை தாண்டியும்
நீ பேருந்து நிறுத்தம் வரவில்லை
என்றால் என் மனம் கனக்கிறது !
நீ வரும் தெருவில் ஓரமாய் நிற்கும்
என் மீது உன் பார்வை  பட்டால்
என் மனம் மிதக்கிறது!
என் மனதோடு தான் எத்தனை
அறிவியல் அதிசயம்!
பேருந்து நிறுத்தத்தில் நீ நிற்கும்
இரண்டு நிமிடத்தில்
பேருந்தையும் பார்த்து கொண்டு
உன் மீது காதல் பார்வை வீச
வேண்டி உள்ளது
கடவுளுக்கு தான் எத்தனை
கல் நெஞ்சம்!
காதலை தயக்கமில்லாமல்
தாராளமாய்  சொல்ல valentine

உருவாக்கி தந்த toll free
தினமும் வேலை நாள் அல்ல
ஞாயிற்று கிழமை
சரி , என் காதல் 
பூஜைக்கு செல்லாத
புது மலர் !

1 comment: