இந்தியா - ஆப்கானிஸ்தான் முதல் டி20 தொடர் மொகாலியில் தொடங்கியது. ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான் காயத்தில் இருந்து மீண்டு வராததால் இப்ராஹிம் ஷர்தான் கேப்டனானார்.
டாஸ் வென்று இந்தியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதிக பனிப்பொழிவு இருந்ததால் 10 டிகிரி வெப்பநிலை நிலவியது. இந்திய அணி தரப்பில் அர்ஷதீப் மற்றும் முகேஷ்குமார் மட்டுமே வேகப்பந்து வீச்சாளர். பகுதி நேரமாக பந்து வீச ஷிவம் துபே மற்றும் திலக் வர்மா இருந்தனர்.
ஆப்கான் தரப்பில் பரூக்கி, நவீன், ஓமர்சாய் என வேகப்பந்து வீச்சாளர்கள், குல்பதீன் மற்றும் கரீம் ஜெனட் என மித வேகப் பந்து வீச்சாளர்கள், இன்னும் இரு ஸ்பின்னர்கள்.
ஆப்கான் துவக்க வீரர்கள் அடித்து ஆட முயற்சித்தாலும் முடியவில்லை. எங்கு அடிப்பது என்ற டெக்னிக் தெரியவில்லை. துவக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். முன்னணி வீரர் ரஹ்மத் ஷா முதல் டி20 போட்டியில் ஆடினார். சீனியர் வீரர்களான நபி மற்றும் நஜிபுல்லா மட்டுமே ஸ்ட்ரெய்டில் அடித்தால் ரன் வரும் என்று உணர்ந்து ஆடினர்.
பெரிய இலக்கை நிர்ணயிக்கவில்லை என்றாலும் முதல் ஓவரில் ரோகித் அவுட்டானார். 4ம் ஓவரில் ஹில்லை அவுட் ஆக்கினர். அதற்கு பிறகு ஆட்டத்தை ஆப்கான் தனது பக்கமாக இழுக்கவே இல்லை. பீல்டிங் செய்ய கடின சூழல், பந்து வீச கடின சூழல் என்று ஆப்கானுக்கு நிறைய கற்று தந்தது இந்தியா.
நேற்றைய போட்டியில் யார்க்கர் அதிகம் போடமுடியவில்லை. ஒரே ஒரு யார்க்கர் அர்ஷதீப் முதல் ஓவரில் வீசியது மட்டுமே என நினைக்கிறேன். ஸ்டம்புக்கு நேராக பந்து வீசவும் முடியவில்லை. எல்பிடபிள்யூ யாரும் ஆகவில்லை. போல்டு ஆன இருவரும் இன்சைட் எட்ஜில் ஆனார்கள். இந்த கடுங்குளிர் மைதானத்தை பிசிசிஐ ஏன் தேர்வு செய்தது என தெரியவில்லை.
இந்திய அணியில் ஜெய்ஸ்வால் இல்லை, சாம்சன் இல்லை. இந்திய அணி உலகக் கோப்பைக்கு எந்த வீரர்களை தேர்வு செய்யப்போகிறது என்ற குழப்பமே நிலவுகிறது.
வரும் ஐபிஎல் போட்டிகளில் பனிப்பொழிவு முக்கிய பங்கு வகிக்கலாம்.
No comments:
Post a Comment