தனியாக பயணிப்பது எனக்கு பெருங்கஷ்டம்.
ஆனால் திலீபன், வடகிழக்கு மாநிலங்களுக்கு தனியாக பயணித்து, பயண அனுபவங்களை எழுத்தில் காட்சிபடுத்தியுள்ளார்.
பெரம்பூரில் இருந்து ஆர்ஏசியில் பயணித்ததாக சொல்கிறார். அதன் கஷ்டங்களையும் சொல்லி இருக்கிறார். (அடிக்கடி பயணிக்கும் திலீபன் ஆட்டோ அப்கிரேட் பற்றியோ, டிடிஆரை க்ரெக்ட் பண்ணுவது பற்றியே தெரியாமலா இருந்திருப்பார்).
ரயில்வே விட்டு இறங்கி கோஹிமாவுக்கு பயணிக்கும் போதே புத்தகத்தை வாசிக்கும் ஆர்வத்தை தூண்டிவிடுகிறார். யூடியூப் வீடியோக்கள் போல இங்கே இது விலை குறைவு, இது விலை அதிகம் என்ற பரிந்துரைகள் இல்லை.முழுக்க முழுக்க அவரது அனுபவங்கள்.
ஸூகு பள்ளத்தாக்கில் தனியாளாக சென்று நிறைய பேருடன் பழகி ஒரு இரவை கழித்துவிட்டு அடுத்த பயண திட்டத்தை மாற்றியது, சிறப்பான சம்பவம்.
இவரது எழுத்து ஈர்க்கிறது, அதே சமயம் மனிதர்களை இவர் பேச்சால் ஈர்த்தாரா, உடல் மொழியால் ஈர்த்தாரா என்று தெரியவில்லை.
சிறுகதை தொகுப்பின் கடைசி பிரதியை கேட்ட பெண், மது அருந்தாத சைவ நண்பர், பைக் டாக்ஸி ஓட்டும் நண்பர், ரஞ்சன், வீட்டிற்கு கூப்பிட்டு சாப்பாடும் போடும் நண்பர் என எல்லாரையும் ஈர்க்கிறார்.
பிரம்மபுத்திரா நடுவில் இருக்கும் தீவு கிராமம் மஜூலி, உயரமான புத்த கோவில் உள்ள தவாங், பனி பொழியும் சீலா பாஸ் என எல்லா இடங்களையும் இவரது வார்த்தையால் சுற்றிப் பார்ப்பது சுகானுபவம்.
இவர் நிறைய எழுத வேண்டும்.
No comments:
Post a Comment