Monday, 6 November 2023

ஏஞ்சலோ மேத்யூஸ்

சர்வதேச கிரிக்கெட்டில் முதன்முதலாக களத்திற்கு நேரத்திற்கு வராததால் ஏஞ்சலோ மேத்யூஸ் அவுட்டாகி உள்ளார்.



கிரிக்கெட் விதிமுறைகளின்படி ஒரு பேட்ஸ்மேன் அவுட்டாகி அல்லது காயம் காரணமாக வெளியேறினால் அடுத்த பேட்ஸ்மேன் இரண்டு நிமிடங்களுக்கு பந்தை எதிர் கொள்ள வேண்டும்.

மாத்யூஸ் இரண்டு நிமிடங்களுக்குள் களத்திற்கு வந்துவிட்டார். ஆனால் ஹெல்மெட்டில் பிரச்சினை இருந்ததால் வேறு ஹெல்மெட் எடுத்து வர சொன்னார். அதற்குள் பங்களாதேஷ் கேப்டன் கால தாமதம் குறித்து அப்பீல் செய்தார். மாற்று வீரர் ஹெல்மெட் கொண்டு வருவதற்குள் காலம் கடந்ததால் அவுட் அறிவிக்கப்பட்டது.

மேத்யூஸ், ஷகீப்பிடம் பேசிய பின்பும் அவர் வாபஸ் பெறவில்லை.

ஷகிப் செய்தது அறமா ? என்றால் அறமே. இங்கு மேத்யூஸ் ஹெல்மேட்டை செக் பண்ணாமல் வந்தது சோம்பேறித்தனத்தின் உச்சம் அல்லவா. ஒரு கிரிக்கெட் வீரர் தனக்கான உபகரணங்களை கூட சரியாக சோதித்து பார்க்காமல் இருப்பது மடத்தனம் அல்லவா. மாற்று வீரர் கொண்டு வரும் ஹெல்மெல்டிலும் பிரச்சினை இருந்தால்...

வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிறிஸ் கெயில் களத்திற்கு வந்து தான் தலையில் துணி கட்டுவார். சந்தர்பால் பெயில்ஸை எடுத்து தரையில் குத்தி தான் ஆட்டத்தை தொடங்குவார். அதெல்லாம் பிரச்சினை ஆனதில்லை. இங்கே ஒரு வீரரின் அலட்சியமே ஆப்பு வைத்துள்ளது.

மேத்யூஸ் அவுட் இளம்வீரர்களுக்கு ஒரு படிப்பினையாக இருக்கும்.

No comments:

Post a Comment