தமிழ் சினிமாவில் திருநெல்வேலி காரர்கள் (தூத்துக்குடிகாரர்களும்) என காட்ட வார்த்தைக்கு வார்த்தை ஏலே என்று அழைக்கும் காட்சிகள் இருக்கும். குறிப்பாக இயக்குநர் ஹரி படங்களில்.
பொதுவாக திருநெல்வேலிகாரர்களின் ஏலே பற்றி பார்ப்போம். (எனக்கு தெரிந்த வரையில்). ஏலே என்று அழைப்பது அதிகாரத்தின் குரலாக இருக்கும். நான் உன்னை விட உயர்ந்தவன் என்ற தொனி. பள்ளிகளில் ஏலே என்று அழைத்தால் பதிலுக்கு என்னலே என்று வரும். நானும் உனக்கு நிகரானவன் என்று.
ஏலே உரிமையின் வெளிப்பாடாகவும் இருக்கும். அப்பா மகனை ஏல இங்க வால என்று அழைப்பது. சொக்காரர்கள் (பங்காளிகள்) மகன்களை ஏலே என்று அழைப்பது உரிமையின் வெளிப்பாடு. நண்பர்களே ஏலே என்று அழைப்பதும் உரிமை தான். ஏலே சுருங்கி ஏல் என்றால் அதிகாரத்தின் வெளிப்பாடு.
அப்பா மகள்களை ஏலே என்று அழைப்பது அன்பின் வெளிப்பாடு. மனைவியை ஏளா என்று வேறு வகை.
No comments:
Post a Comment